ஈரோடு, டிச.4- நியாயவிலைக்கடையில் தரமற்ற அரிசி விநியோகம் செய்ததாக விற்பனையாளர் பணியிடை நீக்கம் செய்யப் பட்டதற்கு தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஈரோடு அருகே வீரப்பன்சத்திரம் தொடக்க வேளாண்மை சங்கம் உள்ளது. இச்சங்கத்தின் மூலம் நடத்தப்படும் நியாய விலைக்கடை தண்ணீர் பந்தல்பாளையத்தில் செயல் படுகிறது. இக்கடைக்கு 130 மூட்டை அரிசி கடந்த 28ஆம் தேதி விநியோகம் செய்யப்பட்டுள்ளது. வழக்கம் போல அரிசி மூட்டைகளைப் பிரித்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், அதனைப் பெற்றுச் சென்ற பயனாளி அரிசியின் தரம் குறித்து வழங்கல் துறையில் புகார் செய்துள் ளார். இதனையடுத்து அக்கடையில் பணியாற்றி வந்த விற்பனையாளர் டி.மணிமேகலை தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அரிசியை தரம்பார்த்து அனுப்ப வேண்டிய அதிகாரிகளின் அலட்சியத்தை மறைப்பதற்கு நியாய விலைக்கடையில் பணியாற்றும் அப்பாவி ஊழியரை பலிகாடாக்குவதற்கு கூட்டுறவு ஊழியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளன இணை செயலாளர் க.உயிர்காத்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, குடிமை பொருள்கள் அனைத்தும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத் திலிருந்து முதன்மை சங்கத்தின் மூலம் அனுப்பப்படுகிறது. மேலும், அதற்கான கிடங்கிலிருந்து வரும் அரிசியை தரம் பார்த்து அனுப்புவதற்கு ஒவ்வொரு கிடங்கிலிருந்து தரக்கட்டுப்பாட்டு ஆய்வாளர் பணியமர்த்தப்பட்டுள்ளார். இவர்கள் அரிசியின் தரத்தை சரிபார்த்த பின்னரே நியாய விலைக்கடைகளுக்கு அனுப்பப்படும். அவ்வாறு தரம் பார்ப்பது தரக்கட்டுப்பாட்டு ஆய்வாளரது தலையாய கடமையாகும். இந்நிலையில், விற்பனையாளர் மீது தரமற்ற அரிசி விநி யோகம் செய்ததாக விற்பனையாளர் பணி நீக்கம் செய்யப் பட்டுள்ளார். இதனை ஏற்கமுடியாது. கடும் கண்டனத்தை தெரித்துக்கொள்கிறோம். ஆகவே, உண்மை நிலை அறிந்து தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட விற்பனையாளர் டி.மணி மேகலையின் பணி நீக்க ஆணையை ரத்து செய்து மீண்டும் பணியமர்த்த செய்ய வேண்டும் என ஈரோடு மண்டல இணைப் பதிவாளரைக் கேட்டுக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட் டுள்ளார்.