கோவை, ஏப்.26- தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் கோவிந்த் வந்தா வின் ‘தாய்க்குடம் பிரிட்ஜ்’ குழு நடத்தும் இசைக்கச்சேரி கோவையில் ஏப்.30 ஆம் தேதியன்று நடைபெறுகிறது. இதுகுறித்து, கோவையில் ரஷ் ரிபப்ளிக் நிறுவனத்தின் நிறுவனர் லக்ஷ்மிகாந்த் செய்தியாளர்களிடம் கூறுகை யில், கொரோனா காலத்தில் வீட்டிலேயே முடங்கி கிடந்த மக்களுக்கு வெளியில் செல்லும் ஆர்வம் அதிகரித்துள்ளது. அந்த வகையில் ஏப்.30 ஆம் தேதியன்று மாலை 6 மணிக்குத் துவங்கி இரவு 9 மணி வரை கோவையில் இசைக் கச்சேரியை நடத்த திட்டமிட்டுள்ளோம். இதில், தமிழ், மலையாளம், இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் ‘தாய்க்குடம் பிரிட்ஜ்’ என்ற அமைப்பினர் இசைக்கச்சேரி நடத்துகின்றனர். இதற் கான நுழைவுச்சீட்டுகள் இணையத்தில் விற்பனை செய்யப் படுகின்றன. மேலும் விபரங்களுக்கு 9088144566 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம், என்றார்.