திருப்பூர், மே 8 தொழிலாளி வர்க்கத்தின் ஒப் பற்றத் தலைவரான தோழர் வி.பி.சிந்தனின் 36ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மார்க் சிஸ்ட் கட்சி மற்றும் சிஐடியு சார்பில் பல்வேறு பகுதிகளில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம், ஊத்துக் குளியில் தோழர் வி.பி.சிந்தனுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சியின் ஊத்துக்குளி தாலுகாக்குழு சார்பில் வி.பி.சிந்தன் நினைவகம் முன்பு மூத்த தோழர் வி.ஏ.நடராஜ் தலைமையில் நினை வேந்தல் நிகழ்வு நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். குமார் மலரஞ்சலி செலுத்தி வி.பி. சிந்தன் போராட்ட வரலாறு பற்றி உரையாற்றினார். ஊத்துக்குளி தாலுகா செயலாளர் எஸ்.கே. கொளந்தசாமி உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். ஈரோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஈரோடு மாவட்டக்குழு அலுவல கத்தில் தோழர் வி.பி.சிந்தன் நினைவு நாள் சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்.சுப்ரமணியன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட செய லாளர் ஆர்.ரகுராமன், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் ப.மாரிமுத்து, ஜி.பழனிசாமி, சி.பரமசிவம், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எச்.ஸ்ரீராம், சகா தேவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.