நாமக்கல்,பிப். 19- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த மூத்த தோழர் வி.ராமசாமியின் நூற்றாண்டு நினைவு தின சிறப்புப் பேரவை கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரக் குழு சார்பில் நகர அலுவலகத்தில், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலை வரும், திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மோளியப்பள்ளி வி.ராமசாமியின் நூற் றாண்டு விழா, கட்சியின் நகரக்குழு செய லாளர் என்.சக்திவேல் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டக் குழு செய லாளர் எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற் குழு உறுப்பினர் எம்.அசோகன், மாவட்டக் குழு உறுப்பினர் எம்.ஆர்.முருகேசன் உள் ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, மோளிப்பள்ளி வி.ராமசாமியின் கட்சிப் பணிகள் குறித்தும் அவருடைய செயல்பா டுகள் குறித்தும் சிறப்புரையாற்றினர். இதில் திரளானோர் பங்கேற்றனர்.