வேலூர். மார்ச் 6 - கட்சிக்காக தோழர் சாவித்திரி, தான் ஏற்றுக்கொண்ட அனைத்து பணிகளை யும் திறம்பட செய்தவர் என்று ஜி.ராம கிருஷ்ணன் புகழாரம் சூட்டினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஒன்றுப்பட்ட வேலூர் மாவட்ட மூத்தத் தலைவரும், மாதர் சங்கம், அஞ்சல் தொழிற்சங்க முன்னோடியும், தனது இல்லத்தையே கட்சிக்கு கொடுத்த மறைந்த தோழர் ஆர்.சாவித் திரி படத்திறப்பு, நினைவு இல்லம் மற்றும் வேலூர் வடக்கு கட்சி அலுவல கம் திறப்பு விழா சத்துவாச்சாரி விஜய ராகவபுரம் போஸ்டல் காலனியில் நடை பெற்றது. இந்த நிகழ்வில் தோழர் சாவித்திரி படத்தை அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராம கிருஷ்ணன் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜி.ராமகிருண்ன், “தோழர் சாவித்திரி கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராகவும், முழு நேர ஊழியராகவும், மாதர் சங்கத் தலைவராகவும் இருந்த போது குடும்ப உறுப்பினர்களை அன்போடு அர வணைத்தவர்” என்றார். தன்னுடைய வாழ்நாள் முழுவ தும் கட்சிக்காகவே உழைத்த தோழர் சாவித்திரி, அதனால்தான் அவர் வாழ்ந்த வீட்டையும் அவரது குடும்பத்தி னர் மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒப்படைத்த னர். அதுமட்டுமல்ல, வலுவான கட்சியை கட்ட வேண்டும் என்ற தங்களது விருப்பத்தையும் தெரிவித்த னர். குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரின் அலுவலக உதவி யாளர், பாரதி புத்தகாலய பொறுப்பா ளர், மாதர் சங்க தலைவர் என தான் ஏற்றுக்கொண்ட அனைத்து பணிகளி லும் தோழர் சாவித்திரி திறம்பட செயல் பட்டவர் என்றும் ராமகிருஷ்ணனன் புக ழாரம் சூட்டினார். மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, “சுதந்திரப் போராட் டத்தில் ஆண்களுக்கு நிகராக போரா டிய கே.பி.ஜானகியம்மாள், பாப்பா உமாநாத் ஆகிய தலைவருடன் இணைந்து பணியாற்றியவர் தோழர் சாவித்திரி” என்றார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பி.கிருஷ்ணமூர்த்தி (அரசு அனைத்து துறை சங்கம்), சி.ஞானசேகரன் (பிஎஸ்என்எல்), ஜி.நரசிம்மன்(அஞ்சல் ஊழியர்), காப்பீட்டு கழக ஊழியர் சங்க வேலூர் கோட்டச் செயலாளர் எஸ்.ராமன், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.டி.சங்கரி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.நாராயணன், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் எம்.பி.ராம ச்சந்திரன், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சக்திவேல், மாதர் சங்க முன்னாள் மாவட்டத் தலைவர் எம்.வளர்மதி, விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் பி.குண சேகரன் ஆகியோரும் பேசினர். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.காத்தவராயன், கே.சாமிநாதன், செ.ஏகலைவன், கே.ஜெ.சீனிவாசன் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்டனர். காட்பாடி வட்டச் செயலாளர் ஆர்.சுடரொளியன் வரவேற்றார். வேலூர் வடக்கு செய லாளர் கே.பாண்டுரங்கன் நன்றி கூறினார். முன்னதாக தோழர் சாவித்திரி யின் மைத்துனர் ரவீந்திரன், அவர் வாழ்ந்த வீட்டின் சாவியை அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணனிடம் வழங்கினார்.