districts

img

30 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியது சின்னவேடம்பட்டி ஏரி நினைவில் நிற்கிறார் தோழர் ஆர்.வெங்கிடு

இந்தியாவின் வர்த்தக மிக முக்கியத்துவம் வாய்ந்த இடமாக கோவை மாவட்டம் திகழ்கி றது. நாட்டில், வளர்ந்து வரும் முதல் 20 பொருளா தார முக்கியத்துவம் மிக்க மண்டலங்களில் ஒன் றாக கோவை உள்ளது. பண்டைய காலத்தி லேயே கொங்கு நாட்டில் 20 வர்த்தக வழிகள்  இருந்ததாகவும், காலம் காலமாக வர்த்தக முக்கி யத்துவம் கொண்ட இடமாக இருக்கிறது. இன்று பிரம்மாண்டமான வளர்ச்சி பெற்று  இருக்கிற கோவை மாவட்டத்தில், லட்சக்கணக் கான உழைப்பாளி மக்களின் உதிரம் சிந்திய உழைப்பால் உருவானவை. இவைகள் குறித்து  இடதுசாரி எழுத்தாளர்களைத் தவிர, எந்த நடு நிலைவாதி என சொல்லப்படுகிற எழுத்தாளர்க ளும் பதிவு செய்யவில்லை என்பது துரதிஷ் டம். கோவை மாவட்டத்தின் அடையாளப்படுத் துகிற ஒன்று, இரண்டு என வரிசைப்படுத்தினால், அதில் செங்கொடி இயக்கத்தின் பங்கும், தலை யீடும் இல்லாத ஒன்று என்பதே இல்லை என உறு தியிட்டுச்சொல்ல முடியும். சிறுவானி குடிநீரை  கோவை மாநகர மக்கள் சுவைப்பதன் பின்னணி யில், கேரள மாநில முதல்வராக இருந்த இஎஸ் எஸ், கோவை மாநகர தந்தையாக இருந்த ஆர். பூபதி என்கிற இரண்டு கம்யூனிஸ்ட்டுகளின் முழு  முன் முயற்சியும், அவர்கள் ஏற்படுத்திய ஒப்பந் தங்களுமே காரணம்.  அடுத்ததாக பஞ்சாலையின் முகமாக இருக் கிற கோவை மாவட்டத்தில், இத்தொழிலில் ஈடு பட்டிருந்த லட்சக்கணக்கான தொழிலாளர்க ளின் உரிமைகளுக்கு பின்னால், செங்கொடியின்  தியாகம் அடங்கியிருக்கிறது. இப்படி அடுக்கிக் கொண்டே போக ஆயிரம் உண்டு என்றாலும், கம் யூனிஸ்ட்டுகளுக்கே உள்ள தன்னடக்கத்தால் பலவும் பதிவு செய்யப்படாமலேயே போனதும்  உண்டு.

இதைப்போலவே, கோவை மாவட்டத்தில் உள்ள சின்னவேடம்பட்டி ஏரி முப்பது ஆண்டுக ளுக்கு பிறகு நிரம்பியதாக, ஊடகங்கள் இடைவி டாது போட்டிபோட்டு ஒளிபரப்பிக்கொண்டி ருக்கிறது. 200 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இந்த சின்னவேடம்பட்டி ஏரியில், 164 ஏக்கரில் தண்ணீர் தேக்க முடியும். ஒரு லட்சத்திற்கும் மேலான மக்களின் நிலத்தடி நீர் ஆதாரம், ஆயி ரக்கணக்கான விவசாய நிலத்துக்கான பாசனம்  என்று இந்த ஏரியை நம்பி ஏராளமான மக்கள் உள் ளனர். கணுவாய், பன்னீர்மடை, சோமையம்பா ளையம், பொன்னேரி ஆகிய நான்கு தடுப்பணை கள், மாங்கரை, பொன்னூத்து, மருத்தங்கரை, மூலக்கடவு, அனுபாவி சுப்ரமணியன் ஆகிய முக் கிய 5 ஓடைகள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட கிளை  ஓடைகள் மூலம் சின்னவேடம்பட்டி ஏரிக்கு தண் ணீர் வர வேண்டும். தற்போது கோவை மாவட்டத் தில் நல்ல மழைப்பொழிவு காரணமாக, தடுப்ப ணைகள் நிறைந்து, ஊட்டு வாய்க்காலுக்கு தொடர்ந்து நீர்வரத்து இருந்ததன் பயனாக ஏரி யின் நீர்மட்டம் விரைவாக உயர்ந்துள்ளது. சின்ன வேடம்பட்டி ஏரிக்கு சுமார் 14 மணி நேரம் நீர்வ ரத்து இருந்துள்ளதால், 30 சதவீதத்துக்கும் மேல்  ஏரியில் நீர் நிரம்பியுள்ளது. தொடர்ந்து மழைப் பொழிவு இருப்பின், நடப்பாண்டு ஏரி நிறைய வாய்ப்புகள் உள்ளன. கோவை மாநகரின் வறட் சியான வடக்கு பகுதியின் நிலத்தடி நீருக்கு உயிர்  ஆதாரமான சின்னவேடம்பட்டி ஏரி நீர் வரத்தி னால் புத்துயிர் பெற்றுள்ளது என ஊடகங்கள் ஒளிபரப்பிக்கொண்டு இருக்கிறது. இதில், ஒரு  இடத்தில் கூட இந்த சின்னவேடம்பட்டி ஏரியை  உருவாக்க விதை ஊன்றி, முளைக்கும் வரை  பாதுகாத்து போராடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் ஒன்றுபட்ட கோவை மாவட்டச் செயலா ளர், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர். வெங்கிடு என்கிற மனிதர் குறித்த செய்தி எங்கும்  இடம்பெறவில்லை என்பது ஆச்சரியம்.

சின்ன வேடம்பட்டி ஏரி உருவான வரலாறு

இதுகுறித்து மதிமுக நிர்வாகியும், கட்சி, மதச் சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநில செயற் குழு உறுப்பினருமான காளிச்சாமி கூறுகையில்,  கோவை மாவட்டத்தில், பெரியநாயக்கம்பாளை யம் வட்டாரம் அன்று செழிப்பாக இருந்த பகுதி.  அதேநேரத்தில் சர்க்கார் சாமகுளத்திற்குட்பட்ட 3  யூனியன் பகுதிகள் 1970- 80 காலகட்டத்தில் மிக வும் வறட்சியான பகுதிகளாக இருந்தது. தொடர்  வறட்சி காரணமாக விவசாயம், கால்நடை பராம ரிப்பு உள்ளிட்ட எந்த பணிகளும் நடைபெற வில்லை. வருவாய் ஈட்ட வேண்டும் என்றால், கள் ளச்சாராயம் காய்ச்சி விற்பது என்கிற தொழிலை  தவிர வேறு தொழில் இல்லை என்கிற நிலை  அன்று இருந்தது. இந்நிலையில்தான், செயற் கையான ஏரியை உருவாக்க வேண்டும் என்கிற  கோரிக்கை வலுத்தது. அன்று அடையாளப்படுத் தக்கூடிய தலைவராக இருந்தவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவ ரான ஆர்.வெங்கிடு அவர்கள். அந்த ஊரே கம்யூ னிஸ்ட் கோட்டையாகத்தான் இருந்தது. நான் கம் யூனிஸ்ட் கட்சிக்காரன் இல்லை, ஆனால்,  உண்மை ஒருபோதும் மறைக்கப்பட்டுவிடக் கூடாது என்பதாலும், நன்றி உணர்தலாலும் இதனை சொல்கிறேன்.  சின்னவேடம்பட்டி பகுதிகளில் செயற்கை யான ஏரியை அமைத்து நீராதாரத்தை பெருக்க  வேண்டும் என்று இந்த திட்டத்தை விடப்பிடியான  உறுதியோடு கம்யூனிஸ்ட் கட்சியினர் இருந்த னர். குறிப்பாக ஒன்றுபட்ட கோவை மாவட்டதின்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளாரகவும், எம்எல்எவாகவும்  ஆர்.வெங் கிடு அவர்களே முழு காரணமாகும்.

இதனைத்தொடர்ந்தே, கோவை வடக்கு பகு தியில் எந்த இயற்கையான நீர் ஆதரங்களும் இல் லாத நிலையில், அரசு ஒரு ஆய்வு குழுவை நிய மித்தது. இந்த ஆய்வு செய்யும் போது, மேற்கு  தொடர்ச்சி மலையொட்டிய தடாகம் பகுதியில்  உற்பத்தியாகிற நீர் சங்கனூர் ஓடை வழியாக  சிங்காநல்லூர் குளத்திற்கு போய்கொண்டிருந் தது. இது பெரு மழை காலத்தில், கோவை மாநக ராட்சிக்குள் வெள்ளம் வருகிறபோது, பேரிடர் ஏற் பட்டு உயிர்ப்பலிகளும் ஆனது. இதனை ஆய்வு செய்த குழுவினர், சின்னவேடம்பட்டியில் ஒரு  ஏரியை கட்ட முடிவு செய்து அறிக்கை அளித்த னர். இதையடுத்து அப்பகுதிகளை சேர்ந்த விவ சாயிகளிடமிருந்து சுமார் 200 ஏக்கர் நிலம் கைய கப்படுத்தப்பட்டு செயற்கையாக ஏரி உருவாக் கப்பட்டது. இந்த ஏரிக்கு நீர் கொண்டுவர கனுவா யிலிருந்து பன்னிமடை, சங்கனூர் ஓடையில் தடுப்பணை கட்டப்பட்டு அங்கிருந்து 8 கிலோ மீட் டருக்கு ஊட்டுக்கால் வாய் வெட்டப்பட்டது. அந்த நிலமும் விவசாயிக ளிடம் இருந்து கையகப்படுத்தப்பட்டது. பூமியை  இழந்தவர்கள் கடும் கோபத்துடன் வெங்கிடு விற்கு எதிராக நின்றனர். ஆனால், இத்திட்டம்  நிறைவேறினால், ஒட்டு மொத்த சர்க்கார் சாமக் குளம் பகுதியே செழிக்கும் என்பதால், அனைத் தையும் நேரிடையாக வெங்கிடு அவர்கள் எதிர் கொண்டார். இந்த திட்டத்திற்காக தொடர்ந்  கோரிக்கை வைத்து போராடியவர்கள் குழந்தை யம்மாள் என்கிற சட்டப்பேரவை உறுப்பினரும்,  ஆர்.வெங்கிடு ஆகியோரும்தான். இந்த சின்ன வேடம்பட்டி ஏரி அமைய வேண்டும் என்பது கம்யூ னிஸ்ட் தலைவர் ஆர்.வெங்கடுவின் கனவு திட் டம் என்றுதான் சொல்ல வேண்டும். சின்னவே டம்பட்டி மக்கள், திருமண வீடு, இழவு வீடு என  எந்த இடம், நேரம் என பார்க்காமல் தொடர்ந்து  ஒன்றுபட்ட கோவை மாவட்டத்தின் மாவட்டச்செ யலாளராக இருந்த வெங்கிடுவிடம் கோரிக்கை  வைத்து வந்தனர். அவரும், கட்சியின் சார்பில்  நடைபெரும் அனைத்து ஒன்றிய, நகர, மாவட்ட  மாநாடுகளில் தீர்மானங்கள் நிறைவேற்றி  அரசுக்கு அழுத்தம் கொடுத்து வந்தார்.  இதனைத்தொடர்ந்தே அன்று, முதலமைச் சராக இருந்த எம்ஜிஆர். இத்திட்டத்திற்கான நிதியை ஒதிக்கினார். இந்த திட்டம் 1981 ஆம்  ஆண்டு தொடங்கப்பட்டு 1987 ஆம் நிறைவு செய் யப்பட்டது. மூன்று ஆண்டுகள் மழை இல்லாமல்  போகவே, ஏரி வறண்டு காணப்பட்டது. பின்னர்  1991 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தான் முதல்  தண்ணீர் வந்தது. இத்திடத்தின்  மூலம் ஊற்று கால்வாயில் அமைந்துள்ள துடியலூர் சுங்க குட்டை, வெள்ளகிணறு தெற்கு குட்டை  ஆகிய  குளங்கள் நீர் ஆதாரம் பெற்றது.

மிச்சத் தண்ணீர்  சின்னவேடம்பட்டி குளத்திற்கு செல்லும். இத னால் நிலதடி நீர் மட்டம் உயர்ந்து, உள்ளாட்சி  அமைப்புகளுக்கான குடிநீர் தேவை, விவசாய பணிகள் ஆகியவை பூர்த்தி செய்யப்பட்டது.  இந்த இடைப்பட்ட காலத்தில் பெரும் மழை  இல்லாததால் ஏரி நிரம்பவில்லை, அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிங்காநல் லூர் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த மறைந்த கே.சி.கருணாகரன் அவர்களிடம் சின்ன வேடம்பட்டி கால்வாய் அகலத்தை அதிகப்ப டுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தோம். அவரும், இந்த திட்டம் துவங்குகிற இடத்தில் இருந்து முடிகிற சின்னவேடம்பட்டி ஏரி வரை  நடந்தே ஆய்வு செய்தார். பின்னர், அன்றைய திட்ட மதிப்பில், 3 மீட்டராக இருந்த கால்வாய் யின் அகலத்தை 6 மீட்டராக உயர்த்த ரூ.65 லட் சம் நிதி ஒதுக்கிடு செய்து அப்பணி முடிக்கப்பட் டது. இன்று சின்னவேடம்பட்டி ஏரிக்கு தண்ணீர்  வருகிறது, ஏரி நிறைகிறது என்பதால் அவர்களை  நாங்கள் நினைத்துப்பார்க்கிறோம். அடுத்த தலைமுறைக்கு உங்களைப்போன்ற ஊடகங் கள் இந்த செய்தியை கடத்த வேண்டும் என்றார்  அக்கறையோடு.

மேலும், அவர் கூறுகையில், அன்று அந்த  தலைவர்களின் தொடர்ச்சியாக இன்று, இளம்  தலைமுறையினர் சின்ன வேடம்பட்டி ஏரியை பாதுகாப்பதில் சின்னவேடம்பட்டி ஏரி பாது காப்பு அமைப்பு, கௌசிகா நீர் கரங்கள் அமைப்பு உள்ளிட்டவர்கள் தொடர்ந்து முயற்சி  மேற்கொண்டு வருகின்றனர். அரசிடம் நிதியை  பெருவது, தங்களது உழைப்பை செலுத்துவது என தொடர்ந்து இயங்கி வருகின்றனர் என் றார். கடந்த 29 ஆண்டுகளில் எவ்வளவு பெரிய மழையிலும் நிரம்பாத நிலையில், கடந்த ஆறு  மாதங்களுக்கு முன்பு அரசின் நமக்கு நாமே திட் டம் மூலம் சுமார் ரூபாய் 60 லட்சம் செலவில் ஏரி  மற்றும் ராஜவாய்க்கால் புனரமைப்பு பணிகள் தொடங்கின. மொத்த நிதியில் 50 சதவீதத்தை தனி யார் நிறுவனமும், மாநகராட்சி சார்பில் 50 சதவீத  நிதியும் அளிக்கப்பட்டது. முன்னதாக, கடந்த 7  ஆண்டுகளுக்கும் மேலாக சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு அமைப்பு மற்றும் கவுசிகா நீர்க ரங்கள் கூட்டமைப்பு மூலமாக ஏரியை பாதுகாக் கும் பொருட்டு நீர் வரத்தை பெரும் வகையிலும்  நீர்வளத்துறை அனுமதியுடன் தனியார் நிறுவ னங்களின் பங்களிப்பு, தன்னார்வலர்களின் களப் பணியால் ஏரி மற்றும் அதற்கு வரும் நீர்வழிப் பாதை சீரமைப்பு, சீமைக்கருவேல மரங்கள்,  குப்பை கழிவுகள் அகற்றுவது உள்ளிட்ட பணி கள் முன்னெடுக்கப்பட்டன. இந்நிலையில் 30  ஆண்டுகளுக்கு பின் தற்போது ஏரிக்கு நீர்வரத்து  அதிகமாக இருப்பது தன்னார்வலர்கள் இடையே மிகுந்த நம்பிக்கையையும், உற்சாகத் தையும் ஏற்படுத்தியுள்ளது.  கோவை மாநகராட்சியுடன் இனைக்கப்பட்ட  இந்த சின்னவேடம்பட்டி ஏரி உள்ள பகுதி தோழர்  ஆர்.வெங்கிடுவின் மகனும், மார்க்சிஸ்ட் கட்சி யின் மாமன்ற உறுப்பினர் வி.இராமமூர்த்தியின் வார்டு என்பதும், சின்னவேடம்பட்டி ஏரியை  பாதுகாக்கும் நடவடிக்கையில், மேற்கண்ட  அமைப்புகளுடன் இணைந்து மார்க்சிஸ்ட் கட்சி யினரும், வாலிபர் சங்கத்தினரும், தொடர்ந்து இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.  (ந.நி)