கட்சியமைப்பில் பல்வேறு துறைகளில் தங்களுடைய அறி வாற்றைலையும், அனு பவத்தையும் முழு மையாக செலுத்தி அரசியலை முன்னெ டுத்துச் செல்லும் தோழர்களை அறி வோம். அதேவேளையில் தீக்கதிர் உள் ளிட்ட கட்சிப் பத்திரிக்கைகளை பிரசுரங் களை ஊழியர்கள் மத்தியிலும், வெகுமக் கள் மத்தியிலும் கொண்டு சென்று அரசியல் பிரச்சாரத்தை விரிவான தளத்திற்கு முன் னெடுத்துச் செல்லும் ஊழியர்கள் வெகு சிலராகத் தான் இருக்க முடியும். அத்தகைய பணிகளை செய்வதற்கு, ஓய்வறியாத உழைப் பும், சோசலிசத்தின் மீதான அளவிலாத பற் றும் இருந்தால் மட்டுமே தொடர்ச்சியாக ஈடு பாடு செலுத்த முடியும். இத்தகைய மகத் தான பணிகளில் ஈடுபட்டுவரும் கட்சித் தோழர்களில் கோவை தோழர்.என்.சின்ன சாமி முன்வரிசையில் இருந்தவர். ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் தனி யான பத்திரிக்கை அவசியம் என்ற சூழலைத் தொடர்ந்து தீக்கதிர் 1963 ஆம் ஆண்டு அப்பு என்கிற அற்புதசாமியை ஆசிரியாகக் கொண்டு துவக்கப்பட்டது. தீக்கதிரை வெளி யிடுவதற்கான நிதியினை கோவை உழைப் பாளி மக்களிடம் திரட்டும் பணியுடன் துவக்க காலத்திலேயே தோழர்.என்.சின்னசாமி தன்னை தீக்கதிருடன் ஈடுபடுத்திக் கொண் டார். கோவை கணபதி டெக்ஸ்டூல் தொழிலா ளியான என்.சின்னசாமி இன்ஜினியரிங் தொழிற்சங்கத்திலும் முன்னணி ஊழியராக செயல்பட்டு வந்தார்.
தீக்கதிர் வாரப்பத்திரிக்கையாக வரத் துவங்கியவுடன் அதன் கோவை மாவட்ட முதல் முகவராக என்.சின்னசாமி, பத்தி ரிக்கையை வாங்கி தன்னுடன் பணியாற்றும் சக தொழிலாளர்களுக்கும், பிற ஆலைக ளுக்கும் அனுப்பி வைத்து பத்திரிக்கையின் மூலம் தொழிலாளர்கள் மத்தியில் வர்க்க அரசியலை கொண்டு சென்றார். இந்த பணியினை அவர் 1963ஆம் ஆண்டு துவங்கி 1993 ஆம் ஆண்டு வரையிலும் 30 ஆண்டு காலம் தொடர்ந்து தீக்கதிர் விநியோ கத்தை மேற்கொண்டார். இருநூறுக்கும் மேலான செம்மலர் இதழையும் விநியோ கித்தார். இந்த காலங்களில் அவர் தீக்கதி ருக்கான பில் தொகையை கட்டுவதில் ஒரு முறை கூட கால தாமதம் செய்ததில்லை என் பதும் உரிய காலத்திற்குள் பில் தொகை யினை மதுரை அலுவலகத்திற்கு போக்கு வரத்து ஊழியர்கள் மூலம் கொடுத்தனுப்பி பத்திரிக்கை விநியோகத்தை பாதிப்பின்றி தொடர்ந்தார் எனபது குறிப்பிடத்தக்கது. கோவையில் தற்போது ஆயிரக்கணக் கானக்கில் தீக்கதிர் விநியோகம் உள்ள தென்றால் அதற்கான வேராக இருந்தது தோழர் என்.சின்னசாமியின் அளப்பறியாத, ஓய்வறியாத உழைப்பு தான் என்பதை உறுதி யாக சொல்ல முடியும். தீக்கதிரை தனது இத யத்தில் சுமந்து கொண்டு வர்க்க அரசியலை முன்னெடுத்து சென்ற தோழர் என்.சின்ன சாமி தனது 83 ஆவது வயதில் வியாழனன்று (30.11.2023) காலமானார். 63 ஆண்டுகளை கடந்து பயணிக்கும் தீக்கதிரின் வளர்ச்சி யில் தோழர் என்.சின்னசாமி போன்ற தோழர் களின் தியாகங்களே அடித்தளமாகும்.தோழர் என்.சின்னசாமியின் தியாகம் என் றென்றும் நிலைத்து நிற்கும். தோழருக்கு செவ்வணக்கம்.
-எஸ்.ஏ.மாணிக்கம்