திருப்பூர், மே 30 - திருப்பூர் மாவட்டத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், சிஐடியு சுமைப்பணித் தொழிலாளர் சங்கத் தின் மாநில நிர்வாகியாக செயல் பட்டவருமான தோழர் என்.ஆறு முகத்தின் 10ஆம் ஆண்டு நினைவு நாள் செவ்வாயன்று கடைப் பிடிக்கப்பட்டது. திருப்பூர் தியாகி பழனிச்சாமி நிலையம் முன்பாக செவ்வாயன்று அவரது உருவப்படம் வைக்கப் பட்டு மலரஞ்சலி நிகழ்ச்சி நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு கட்சியின் வடக்கு மாநகரச் செயலாளர் பி.ஆர்.கணேசன் தலைமை ஏற் றார். மாவட்டச் செயலாளர் செ. முத்துக்கண்ணன், தோழர் என்.ஆறுமுகத்தின் பணிகளை நினைவு கூர்ந்து உரையாற்றினர். இதைத் தொடர்ந்து கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், தோழர் ஆறுமுகம் படத்துக்கு மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தினார். இதைத் தொடர்ந்து நிகழ்வில் பங் கேற்றவர்கள் அனைவரும் மலரஞ் சலி செலுத்தினர்.
அதேபோல் தோழர் என். ஆறு முகத்தின் 10ஆம் ஆண்டு நினை வஞ்சலி நிகழ்வு திருப்பூர் தெற்கு மாநகரம், அரிசி கடை வீதியில் நடைபெற்றது. இதில், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.உண்ணிகிருஷ்ணன், தெற்கு மாநகரச் செயலாளர் டி.ஜெய பால், மாநகரக்குழு உறுப்பினர் கள் பி.பாலன், பா.ஞானசேகர், ஜி. செந்தில்குமார், நா.சஞ்சீவ், ஆட்டோ சங்க நிர்வாகிகள் டி.வி. சுகுமார், சி.பெருமாள், சுமைப்பணி கமிட்டி உறுப்பினர்கள் லோக நாதன், ஆறுமுகம் மற்றும் மாதர் சங்கத்தைச் சேர்ந்த ஈ.அங்குலட் சுமி உள்ளிட்டோர் பங்கேற்று அஞ் சலி செலுத்தினர். ரயில்வே கூட்செட் தொழிலாளர்கள் திருப்பூர் ரயில் நிலைய கூட் செட் அருகே சிஐடியு திருப்பூர் மாவட்ட சுமைப்பணித் தொழி லாளர் சங்கத்தின் சார்பில் தோழர் என்.ஆறுமுகம் நினைவஞ்சலி நிகழ்ச்சி கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிஐடியு சுமைப் பணித் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் எம்.ராஜகோபால் செங் கொடியை ஏற்றி வைத்து உரை யாற்றினார். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.உண்ணி கிருஷ்ணன். தோழர் ஆறுமுகத் தின் பணிகளை நினைவு கூர்ந்து உரையாற்றினார். இந்த நிகழ் வில் சிஐடியு ரயில்வே கூட்செட் தொழிலாளர் சங்க தலைவர் எஸ்.என்.பழனிச்சாமி, செயலாளர் ஜி.ஆறுமுகம், பொருளாளர் செல்வம் உள்பட நூற்றுக்கும் மேற் பட்ட சுமைப்பணி தொழிலாளர்கள் கலந்து கொண்டு தோழர் ஆறு முகத்திற்கு நினைவஞ்சலி செலுத் தினர்.