ஈரோடு, ஜன.17- மார்க்சிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்ட முன்னாள் செயற்குழு உறுப்பினர் தோழர் எம்.என்.காளியண்ணன் 26 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்ட முன்னாள் செயற்குழு உறுப்பினரும், முதுபெரும் தலைவருமான தோழர் எம்.என்.காளியண்ணன் 26 ஆம் ஆண்டு தினம் அந்தியூர் வட்டம், கீழ்பவானியில் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.வி.மாரிமுத்து தலைமை வகித்தார். அந்தியூர் தாலுகா குழு உறுப்பினர் ஏ.கே.பழனிச்சாமி வரவேற்புரையாற்றினார். இதில், மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.பி.பழனிச்சாமி, ஆர்.கோமதி, ஆர்.விஜயராகவன், மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.ஜெகநாதன், அந்தியூர் தாலுகா செயலாளர் ஆர்.முருகேசன், பவானி தாலுகா செயலாளர் எஸ்.மாணிக்கம் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டு தோழர் எம்.என்.காளியண்ணன் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். கட்சி நிதியளிப்பு இதைத்தொடர்ந்து, அந்தியூர் தாலுகா குழு சார்பில் ரூ.1.50 லட்சமும், பவானி தாலுகா குழு சார்பில் ரூ.1 லட்சமும் என மொத்தம் ரூ.2.50 லட்சம் கட்சி நிதி மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமனிடம் வழங்கப்பட்டது.