ஈரோடு, மே 11- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன் னாள் ஈரோடு மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் எம்.நாச்சிமுத்து வெள்ளியன்று இரவு காலமானார். தோழர் எம்.என் என அனைவராலும் அன் போடு அழைக்கப்படும் தோழர் எம்.நாச்சி முத்து ஈரோடு மாவட்டம், நசியனூர் அருகே ஊனாத்திபுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர். விவசாய தொழிலாளியான நாச்சிமுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பால் ஈர்க் கப்பட்டு தன்னை கட்சியில் இணைத்துக் கொண்டார். கடந்த 1999 ஆம் ஆண்டிலிருந்து கட்சியின் முழு நேர ஊழியரான நாச்சிமுத்து ஈரோடு தாலுகா செயலாளராகவும், மாவட் டக்குழு உறுப்பினராகவும், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினராகவும், மாவட்ட பொருளா ளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் செயல்பட்டவர். உழைப்பாளி வர்க்கத்திற் காக முன்நின்று பல போராட்டங்களை நடத்தி யவர். தீக்கதிர் முகவராகவும் நீண்ட காலம் சிறப்பாக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் கடந்த சில மாதங்களாக பாதிக்கப்பட்டிருந் தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நாச்சிமுத்து வெள்ளியன்று இரவு 8.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அன்னாரது பூத உடல் ஊனாத் திபுதூரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ் சலிக்காக வைக்கப்பட்டது. மாவட்டச் செய லாளர் ஆர்.ரகுராமன் தலைமையில் மூத்த தோழர் கே.துரைராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.பழனிசாமி, ஆர்.கோமதி, ஆர்.விஜயராகவன், தாலுகா செயலாளர் பாலசுப்பிரமணி, மாவட்டக்குழு உறுப்பி னர்கள் லலிதா, சுந்தரராஜன் உள்ளிட்ட தலைவர்கள் மலர் வளையம் வைத்து அஞ் சலி செலுத்தினர். சனியன்று இறுதி நிகழ்ச்சிகள் நடைபெற் றது. தாலுகா செயலாளர் என்.பாலசுப்பிர மணி தலைமையில் நடைபெற்ற இரங்கல் கூட் டத்தில், மார்க்சிஸ்ட் கட்சி, விச, விதொச, சிஐ டியு, வாலிபர், மாதர், மாணவர் சங்கங்களின் தலைவர்கள் பங்கேற்று தோழர் எம்.என் குறித்த நினைவுகளை பகிர்ந்து கொண்ட னர்.