ஈரோடு, ஜன. 18- ஈரோடு மாவட்டம், கீழ்வாணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் தோழர் எம்.என்.காளியண் ணன் நினைவு தின பொதுக் கூட்டம் நடைபெற்றது. உழைப்பாளி மக்களின் விடுதலைக் காக தம் வாழ்வை அர்ப்பணித்த முதுபெ ரும் தலைவர் தோழர் எம்.என்.காளி யண்ணனின் 28ஆம் நினைவு நாள் பொதுக்கூட்டம் கீழ்வாணி சந்தை அருகில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, அந்தியூர் தாலுகாச் செயலாளர் ஆர்.முருகேசன் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.வி.மாரிமுத்து வரவேற்றார். இதைத் தொடர்ந்து, மத்தியக் குழு உறுப்பினர் பெ.சண்முகம் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில், மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன், செயற்குழு உறுப்பினர் கள் பி.பி.பழனிசாமி, ஆர்.கோமதி, ஏ.எம்.முனுசாமி, ஏ.ஆர்.விஜயராக வன், பவானி தாலுகாச் செயலாளர் எஸ்.மாணிக்கம், மாவட்டக் குழு உறுப் பினர் ஏ.ஜெகநாதன் உள்ளிட்ட பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, தோழர் எம்.என்.காளி யண்ணன் இல்லத்தில் வைக்கப்பட் டிருந்த படத்திற்கு மத்தியக் குழு உறுப்பினர் பெ.சண்முகம் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.