districts

img

தோழர் காளியண்ணன் நினைவு தினம்

ஈரோடு, ஜன.17- தோழர் எம்.என்.காளியண்ணன் 100 ஆவது பிறந்த நாள் மற்றும் நினைவுதினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டக்குழு அலுவலகத்தில் வெள்ளியன்று கடைப் பிடிக்கப்பட்டது. உழைப்பாளி மக்களுக்காக தன் வாழ்நாளை அர்ப் பணித்த முதுபெரும் தோழர் எம்.என்.காளியண்ணனின் 100 ஆவது பிறந்த நாள் மற்றும் 29 ஆம் ஆண்டு நினைவு தினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டக்குழு அலுவலகத்தில் கடைபிடிக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.சுந்தர ராஜன், மாவட்டக்குழு உறுப்பினர் சி.ஜோதிமணி, சிஐடியு  மாவட்டத் தலைவர் எச்.’ஸ்ரீராம், பி.கனகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று அவரது உருவப்படத்திற்கு செவ்வணக்கம் செலுத் தினர்.  அதேபோல் அந்தியூர் தாலுகா அலுவலகத்தில்.நடை பெற்ற நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.வி.மாரிமுத்து, தாலுகா குழு உறுப்பினர் ஏ.கே.பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.