திருப்பூர், ஜன. 17 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பி னராகவும், சிஐடியு நிர்வாகியாகவும் செயல்பட்ட தோழர் கே. பொன்னுசாமியின் 12ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி திருப்பூரில் கடைப்பிடிக்கப்பட்டது. திருப்பூர் தியாகி பழனிசாமி நிலையம் முன்பாக புதன் கிழமை நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு கட்சியின் வடக்கு மாநகரச் செயலாளர் பி.ஆர். கணேசன் தலைமை யேற்றார். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் தோழர் கே.பொன்னுசாமியின் பணிகளை நினைவு கூர்ந்து உரையாற்றினார். இதையடுத்து கே பொன்னுசாமியின் உரு வப்படத்திற்கு அனைவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தி னர். இந்நிகழ்வில் சிஐடியு மாவட்ட தலைவர் சி.மூர்த்தி, கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். சுப்பிரமணியன், பனியன் சங்க பொதுச் செயலாளர் ஜி.சம்பத், வடக்கு ஒன்றிய செயலாளர் ஆர். காளியப்பன், தெற்கு மாநகரச் செயலா ளர் டி.ஜெயபால் உள்பட திரளானோர் கலந்து கொண்ட னர்.