districts

img

தோழர் ஏ.எம்.காதர் நினைவு சிறப்பு கூட்டம்

ஈரோடு,டிச 19- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நூற் றாண்டு மற்றும் மூத்த தோழர் ஏ.எம்.காதர் அவர் களின் 11 ஆவது நினைவு தினத்தையொட்டி புளியம் பட்டி பகுதியில் புதனன்று  சிறப்பு பேரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, ஒன்றிய கமிட்டி உறுப் பினர் ஊட்டி சுப்பு தலைமை வகித்தார். சிபிஎம்  மாநில செயற்குழு உறுப் பினர் கே.தங்கவேல், மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் கே.துரைராஜ், பி.மாரிமுத்து, ஒன்றிய  செயலாளர் டி.சுப்பிரமணி, மற்றும் கமிட்டி உறுப்பி னர்கள் உட்பட திரளா னோர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில், மருதம் பல்பொருள் அங்காடியின் உரிமையாளர் அமுதவள்ளி  கட்சி நிதியாக ரூபாய் ஒரு லட்சத்தை மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேலுவிடம் வழங்கினார். முன்னதாக, ஏ.எம்.காதர் நினைவு கல்வெட்டு திறக்கப்பட்டது. இதேபோல், கடம்பூர் பேருந்து நிலையம், கரளையம், காடட்டி, குன்றி, புளியம்பட்டி ஆகிய பகுதியில் ஏ.எம்.காதர் உருவப்படத் திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப் பட்டது.