districts

img

தோழர் ஏ.நல்லசிவன், தோழர் ஆர்.உமாநாத் நூற்றாண்டு நிறைவு

தோழர் ஏ.நல்லசிவன், தோழர் ஆர்.உமாநாத் நூற்றாண்டு நிறைவு, மார்க்சிஸ்ட் வாசகர் வட்ட 175 ஆம் அமர்வு ஆகிய முப்பெரும் விழா சிறப்பு கருத்தரங்கம் ஈரோடு மாநகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.மாரிமுத்து தலைமை வகித்தார். கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் ஏ.கே.பத்மநாபன், மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.பரமசிவம், மூத்த தலைவர் கே.துரைராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.