districts

img

சிக்கலான பணியை கிராம சுகாதார செவிலியர்கள் மீது திணிக்கக்கூடாது

சிக்கலான பணியை கிராம சுகாதார செவிலியர்கள் மீது திணிக்கக்கூடாது என வலியுறுத்தி கோவை, பந்தையசாலை பகுதியிலுள்ள துணை இயக்குநர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சுகாதார செவிலி யர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.சாந்தி தலைமை வகித்தார். இதில், மாநில அமைப்பு செயலாளர் ஏ.பிரகலாதா, தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழி யர் கூட்டமைப்பின் இணைச்செயலாளர் எஸ்.சுரேஷ், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஜெக நாதன், செவிலியர் சங்க மாவட்ட இணைச்செயலாளர் ஏ.ஸ்டெல்லா, துணைத்தலைவர் ஜமுனா, பொருளாளர் ஏ.நாகலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.