districts

img

மலை போல் தேங்கும் குப்பை: நல்வாழ்வு மையத்திற்கு வரும் நோயாளிகளுக்கே நோய் பரவுவதாகப் புகார்

திருப்பூர், அக்.15- திருப்பூர் மாநகராட்சி மேட்டுப்பாளையம் அருகே சாலை முழுவதும் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள், நகர்புற நல்வாழ்வு மையத் திற்கு வரும் நோயாளிகள், அங்கன்வாடி குழந்தைகள் என பல்வேறு தரப்பின ருக்கும் நோய் தொற்று ஏற்படும் அபாயம்  உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்ற னர். திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 30 ஆவது வார்டு மேட்டுப்பாளையம், காமராஜ் நகர் பகுதியில் உள்ள சாலை முழுவதும் குப் பைகள் கொட்டப்பட்டுள்ளது. சாலை முழுவ தும் மலை போல் குப்பைகள் தேங்கி உள்ள தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அவிநாசி சாலையில் இருந்து, ஒருவழி  சாலையான பிஎன் சாலையில் இணைவ தற்காக வரும் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், தனியார் லோடு  வாகனங்கள் என தினந்தோறும் ஆயி ரக்கணக்கான வாகனங்கள் காமராஜர் நகர்  சாலை வழியாக வந்து செல்கிறது.  இந்நிலையில், கடந்த வாரம் ஆயுதபூஜை  என்பதால், வீடுகளில் சேகரிக்கப்பட்ட வாழை  மரங்கள், கருப்பு சக்கைகள் உள்ளிட்ட ஏரா ளமான குப்பைகள் பிரதான சாலையான மேட்டுபாளையம் பி.என். சாலை அருகே கொட்டப்பட்டுள்ளது. இவ்வாறு குவிந்து கிடக்கும் குப்பைகள் காரணமாக கடும் துர் நாற்றம் வீசுவதோடு, அந்த பகுதி முழுவதும்  சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இத னால் அந்த வழியாக சாலையில் பயணம்  செய்யும் வாகன ஓட்டிகள், துர்நாற்றம் தாங்க  முடியாமல் மூக்கை பிடித்துக் கொண்டு செல் கின்றனர். மேலும், சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளை அங்கு சுற்றித் திரி யும் மாடுகள், நாய்கள் போன்றவை கிளறி விடுவதால் சாலை முழுவதும் குப்பைகள் சிதறி அந்த பகுதியே அலங்கோலமாகக் காட் சியளிக்கிறது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறு கையில், குப்பை மலை போல் கொட்டப்பட் டுள்ள சாலையில்தான் நகர்ப்புற சுகாதார நிலையம், பிரதான சாலையான பிஎன் சாலை  ஆகியவை உள்ளன. மேலும் குப்பை கொட் டும் இடத்தின் அருகிலேயே அங்கன்வாடி மையமும் அமைந்துள்ளது. இந்த குப்பைக ளால் அங்கன்வாடிக்கு வந்து செல்லும் குழந் தைகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். கடந்த மாதத்தில் சாலை அமைப்பதற்காக குப்பைகள் இல்லாமல் காணப்பட்டது. ஒரு  வழியாக குப்பையில் இருந்து விடிவு பிறந்து விட்டது என்று எண்ணினோம். ஆனால் சாலை  அமைப்பதற்காகத்தான் குப்பை கொட்டப் படவில்லை என்பது பின்நாட்களில் தெரிய வந்தது. ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் இப்படிப்பட்ட முக்கிய சாலை யில் மாநகராட்சி ஊழியர்கள் குப்பை கொட்டி னால், யாரிடம் போய் சொல்வது? கவுன்சி லரிடம் கேட்டால் குப்பை கொட்டும் இடம் நிரம்பிவிட்டதால் இங்கு கொட்டப்படுகிறது என்று கூறுகின்றனர். ஆனால் இப்பொழுது மட்டும் இங்கு குப்பை இல்லை. எப்பொழு துமே இங்கு குப்பையாகத்தான் இருக்கி றது. மேலும் மலை போல் குப்பைகளின் மேல்  ஈக்கள், கொசுக்கள் மற்றும் பூச்சிகள் மொய்க் கின்றன. மழைக்காலம் என்பதால் மலே ரியா, டெங்கு, சிக்குன்குனியா உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் தொடர்ந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உட னடியாக தலையிட்டு, இங்கு குப்பை கொட்டு வதை நிறுத்த வேண்டும். மலை போல் தேங்கி  கிடக்கும் குப்பைகளை உடனடியாக அப்பு றப்படுத்த வேண்டும் என தெரிவித்தனர்.