தருமபுரி, ஜூலை 31- பத்ரஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர் முறைகேடு செய்வதை தடுக்க வலியு றுத்தி ஊராட்சி மன்ற துணைத்தலை வர் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தியிடம் புகாரளித்துள்ளார். தருமபுரி மாவட்டம், ஏரியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது பத்ரஅள்ளி ஊராட்சி. ஊராட்சி மன்ற தலைவராக சீரங்காயி என்பவர் பணியாற்றி வருகி றார். இவர் அலுவலகத்திற்கு வருவ தில்லை. மாறாக சீரங்காயின் கணவர் அறிவிக்கப்படாத தலைவராக செயல் படுகிறார். ஊராட்சி மன்ற தலைவரின் கையொப்பத்தை இவரே போடுகிறார். ஆவணங்களை சரி செய்வது, நிதிகளை கையால்வது போன்ற சட்டத்துக்கு புறம் பாக, ஊராட்சி நிர்வாகத்தில் தலையிட்டு வருகிறார். மேலும், ஊராட்சி மன்ற கூட் டத்தை நடத்துவதில்லை. கூட்டம் நடத் தியதாக ஊராட்சி மன்ற உறுப்பினர் களின் கையொப்பத்தை இவரே போடு கிறார். இதுபோன்ற முறைகேடுகளுக்கு ஊராட்சி செயலாளரும் உடந்தையாக உள்ளார். மேலும், ஊராட்சிக்கு ஒதுக் கப்படும் நிதியில் பல்வேறு முறைகேடு நடந்துள்ளது. எனவே, இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பெருமாள் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தியிடம் மனு அளித்தார்.