அவிநாசி, ஜூலை 25- அவிநாசி அருகே உப்பிலிபாளை யத்தில் அரசு சான்றிதழ்களுக்கு லஞ்சம் பெறும் கிராம நிர்வாக அலுவலர் மீது நட வடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ள னர். இது குறித்து பொதுமக்கள் ஆட்சி யரிடம் அளித்த மனுவில் கூறியிருப்ப தாவது : உப்பிலிபாளையம் கிராமத்தில் வாரிசு, வருமானம், இருப்பிடம், பட்டா மாறுதல் உள்ளிட்ட சான்றி தழ்களுக்கு விண்ணப்பித்து விட்டு, கிராம நிர்வாக அலுவலர் ஜெயக்குமாரிடம் சென்றால். விண்ணப்பதாரர் அலைபேசி எண்ணை பெற்று கொள்கிறார். பிறகு இரவு 7 மணிக்கு மேல் தொடர்பு கொண்டு ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரச் சொல்கி றார். அங்கு காரில் அவர் வந்ததும் சான் றுகளுக்கு ஏற்றார் போல் ரூ.5,000 முதல் 1,00,000 வரை பேரம் பேசுகிறார். ஏன் பணம் தரவேண்டும் என்று கேட்டால் காருக்கு பெட்ரோல், ஓட்டுநர் சம்பளம், வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சி யர், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட ஆட்சியர் அனைத்து அதிகாரிக ளுக்கும் மாதம் ரூ.1,00,000தர வேண்டும் எனக் கூறுகிறார். பணம் தர மறுத்தால் சான்றுகள் தர மாதக் கணக்கில் அலைக்கழிக்கிறார், இல்லையென் றால் சான்றுகளை நிராகரிக்கிறார். காரணம் கேட்டால், நான் ஆளும் கட்சி யைச் சேர்ந்தவன், அமைச்சர் எல்லோ ரும் எனக்குத் தெரியும் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்கிறார். மேலும் பணத்தை, அவரது கார் ஓட் டுநர் கூகுள் கணக்கில் அனுப்ப சொல்கி றார். ஓட்டுநர் பணம் வந்தது என்று தக வல் சொன்னால் தான் கிராம நிர்வாக அலுவலர் சான்று தருகிறார்.இதுகு றித்து கிராம உதவியாளரிடம் கேட்டால், கிராம நிர்வாக அலுவலர் எப்பவும் இப் படிதான், லஞ்சப் பணம் கொடுத்தால் மட்டுமே வேலை நடக்கும். என்கிறார்.ஆகவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தது. இது குறித்து வருவாய்த்துறையி னரிடம் கேட்ட போது, விசாரணை மேற் கொண்டு வருவதாகவும், விரைவில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்ப டும், என்றனர்.