நாமக்கல், பிப்.5- சாயக்கழிவு நீர் காவிரி ஆற்றில் கலப் பதை தடுக்க கோரி மதிமுகவினர் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். குமாரபாளைத்தில் தாலுகா உட்பட்ட ஆவத்திபாளையம் சுற்றுவட்டார பகுதிக ளில், களியனூர் சமயசங்கிலி உள்பட 40க்கும் இடங்களில் சாயப்பட்டறைகள் இயங்கி வருகிறது. மேலும் அக்ரஹாரம், புதன் சந்தை மற்றும் பெரியார் நகர், வசந்தா நகர் உள்ளிட்ட இடங்களில், நூற்றுக்கும் மேற்பட்ட சாயப் பட்டறைகள் இயங்கி வருகின்றன. பெரும்பா லான சாயப்பட்டறைகளில் கழிவு நீர் சுத்தி கரிக்கப்படாமல் அப்படியே வெளியேற்றப் பட்டு, அது சாக்கடை நீர் வழியாக காவிரி ஆற்றில் கலக்கிறது. கடுமையான வெப்பத் துடன் இரவு நேரத்தில் வெளியேற்றப்படும் இந்நீரால், பொதுமக்களுக்கு கண் எரிச்சல், இருமல் போன்ற வியாதிகளும், கழிவு நீரை பருகுவதால் எண்ணற்ற உடல் உபாதை களும் ஏற்பட்டு, புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் உருவாக காரணமாக தற்போது காவிரி ஆறு மாறி உள்ளது. பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாகவும் காவிரி ஆறு விளங்கி வருகிறது. பள்ளிபாளையம் வட்டாரத்தில் உள்ள ஏராளமான பொதுமக்கள் உள்ள நிலையில், அவர்களுக்கு பாதிக்காத வண் ணம் இதற்கு உரிய நடவடிக்கையை மாவட்ட ஆட்சியர் எடுக்க வேண்டுமென மனுவில் தெரிவித்துள்ளனர். இம்மனுவை பள்ளிபா ளையம் நகர மதிமுக செயலாளர் ரமேஷ் தலைமையில் திரளானோர் பங்கேற்று அளித்தனர்.