திருப்பூர், நவ.4 - தொடர் மழை பெய்ததில் பல்ல டம், அறிவொளி நகர் அருகே உள்ள நரிக்குறவர் காலனி பகுதியில் 20 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந் துள்ளன. இதுவரை அதிகாரிகாரி கள் யாரு்ம் நேரில் வரவில்லை என அப்பகுதி மக்கள் திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் திங்களன்று மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தலை மையில் நடைபெற்றது. இங்கு வந் திருந்த நரிக்குறவர் காலனி மக்கள் தெரிவிக்கையில், பல்லடம் தாலுகா, அறிவொளி நகர் நரிக்குற வர் காலனியில் 140க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 25 ஆண்டுகளாக வசித்து வருகின்றோம். இங்கு எந்த அடிப்படை வசதியும் இல்லை. பூச்சி, பாம்புகளுக்கு மத்தியில் குழந்தைகளை வைத்துக் கொண்டு குடும்பம் நடத்தி வருகிறோம். சாக் கடை தூர்வாரக்கூட ஆள் வரவில் லை. இந்நிலையில், கடந்த வாரம் பெய்த தொடர் மழையால் எங்கள் பகுதியில் உள்ள 26 குடும்பத்தின ரின் வீடுகள் இடிந்து சேதமாகி யுள்ளன. சில வீடுகளுக்கு மேல் கூரை, சில வீடுகளுக்கு சுவர்கள் இடிந்துள்ளதால், எங்களால் வெளி யில் சென்று ஊசி, பாசி விற்க முடி யவில்லை. குழந்தைகளை வைத்துக் கொண்டு கடும் சிரமத்தில் உள்ளோம். உணவு, துணிகள் கூட இல்லாமல் அவதிக்குள்ளாகி இருக்கிறோம். வீடுகள் சேதமாகி இன்றோடு 5 நாட்கள் ஆகியும், இது வரை அரசு அதிகாரிகள் ஒருவர்கூட வந்து பார்க்கவில்லை என்பது வேதனையாக உள்ளது. எங்கள் மக்களுக்கு எந்த உதவியும் செய்யப்படுவதில்லை. எங்களுக் குத் தேவையான அடிப்படை வசதி களை ஏற்படுத்தி தரக் கோரி மாவட்ட ஆட்சியரை சந்திக்க குழந்தைகளுடன் வந்துள்ளதாகத் தெரிவித்தனர். கோழி வாகனத்தை சிறை பிடிக்கப் போவதாக அறிவிப்பு சின்னக்காம்பாளையம் பகுதி மக்கள் இக்கூட்டத்தில் அளித்த மனு வில், திருப்பூர் மாவட்டம், தாரா புரம் வட்டம் சின்னக்கம்பாளையம் கிராமத்தில் நந்து பீடிங் பார்ம் கோழிப்பண்ணை செயல்பட்டு வரு கிறது. இந்த கோழிப்பண்ணை யால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும், இந்த பண்ணையில் இருந்து பல விதமான பூச்சிகள், ஈக்கள் உற்பத்தியாகி குடியிருப்பு பகுதிகளுக்குள் வருகின்றன. இத னால் முதியவர்கள் முதல் குழந்தை கள் வரை நோய்த்தாக்குதலுக் குள்ளாகி வருகின்றனர். எனவே இந்த கோழிப்பண்ணையை அப்பு றப்படுத்த வேண்டும் என பல முறை மனு அளித்துள்ளோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்ப டவில்லை. இந்நிலையில், புதிய பண்ணை அமைக்க வேலைகள் நடைபெற்று வருகிறது. மழைக்கா லம் என்பதால் மேலும் ஈக்களின் தொல்லை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. எனவே உடன டியாக இக்கோழிப்பண்ணையில் கோழிகளை விடுவதற்குள் தடுத்து நிறுத்த வேண்டும். நடவடிக்கை எதும் எடுக்காதபட்சத்தில், புதிய கோழிக்குஞ்சுகளை கொண்டு வரும் வாகனத்தை சிறைப் பிடித்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என குறிப்பிட்டுள்ளனர். தொமுச மாநில இணை பொதுச் செயலாளர் அ.சரவணன் அளித்த மனுவில் திருப்பூர் போயம்பாளை யம் அரசு பள்ளி எதிரிலுள்ள சாலை மிகவும் பழுதடைந்து உள்ளது. இத னால், இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளா கின்றனா். அவசர காலங்களில் இவ் வழியாக 108 ஆம்புலன்ஸ் செல்வ தில் கூட சிரமம் ஏற்படுகிறது. இது பற்றி கடந்த வாரம் திருப்பூர் மாநக ராட்சி அலுவலகத்தில் புகார் அளிக் கப்பட்டது. அப்போது அங்குள்ள அலுவலர்கள் சாலை அமைக்க கடந்த மார்ச் மாதமே நிதி ஒதுக்கி பூமி பூஜை போட்டப்பட்டு பணிகள் நடைபெற்றதாகத் தெரிவித்தனர். ஆனால் எவ்வித பணிகளும் நடை பெறவில்லை. மேற்படி சாலை அமைக்க ஒதுக்கிய நிதி என்ன ஆனது என்ற தகவல் தெரிய வில்லை. இளநிலைப்பொறியாளர் வேல்முருகனிடம் கேட்டபோது தவறு நடைபெற்றது உண்மை தான். நிதி மாற்றி பயன்படுத்தப் பட்டது. இந்த விசயத்தை பெரிது பண்ண வேண்டாம். 10, 15 நாட்க ளில் சாலை அமைத்து தருகிறேன் என்றார். அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் இச்செ யல் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். திருப்பூர் தொட்டிபாளையம் கிராமம் நேருநகர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்க ளன்று கோரிக்கை மனு அளித்தார். திருப்பூர் மாவட்டம் தொட்டிபா ளையம் கிராமம் நேரு நகர் பகுதி யில் வசித்து வருகிறேன். 15 வயதில் மாற்றுத்திறனாளியான மகள் உள்ளார். சுயமாக இயற்கை உபா தைக்குக்கூட செல்ல முடியாத நிலை உள்ளதால், பல்வேறு பகுதி களில் வாடகைக்குக்கூட வீடுகள் தர மறுக்கிறார்கள். நாங்கள் குடும்பத்துடன் உயிர் வாழ்வதற்கு மிகவும் சிரமப்படுகிறோம் . கூலி வேலை செய்து வறுமைக்கோட் டிற்கு கீழ் வாழ்ந்து வருகிறோம். 80 சதவீதம் விழுக்காடு ஊனத் தன்மை உள்ள என் மகளை நிரந்தர மாக ஒரே இடத்தில் வைத்து பரா மரிக்க வீடு இல்லாத எங்களுக்கு குடிசை மாற்று வாரியத்தில் மாவட்ட ஆட்சியரின் விருப்பு ரிமை அடிப்படையில் வீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். அதேபோல் தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் வீடுகள் ஒதுக்கியதில் முறைகேடு நடை பெற்றுள்ளது. வீடுகளை பெற்ற சிலர் உள்வாடகைக்கு விட்டு உள்ள தாவும், அதை உடனடியாக மீட்டு ஏழை எளிய மக்களுக்கு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.