திருப்பூர், ஏப்.29- கை, கால்களை கட்டி வனத் துறையின் ஜீப்பில் தூக்கிப்போட்டு சோதனைச்சாவடிக்கு கொண்டு சென்று மிரட்டப்பட்ட விஷ்ணுராஜ் என்பவர் கடுமையான மன உளைச் சலுக்கு ஆளாகினார். இதுதொடர்பாக அவர் திங்க ளன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாள ரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: உடுமலைப் பேட்டை வட்டம், தளி பேரூராட்சிக் குட்பட்ட திருமூர்த்தி நகர் சாம்பல் மேடு பகுதியில் வசித்து வருகி றேன். நான் டிப்ளமோ மெக்கானிக் கல் இன்ஜினியரிங் படித்து விட்டு, மேலும் படிப்பதற்கு வசதியில்லா மல் கூலி வேலைக்கு சென்று வரு கிறேன். கடந்த ஏப்ரல் 27 அன்று திரு மூர்த்தி அணை அருகில் உள்ள அரசு மீன் பண்ணையில் வேலை செய்து கொண்டு இருந்தேன். அப் போது மீன் பண்ணைக்குள் வனத் துறையினர் ஜீப் வந்து நின்றது. ஜீப் பில் இருந்த உடுமலைப்பேட்டை ரேஞ்சர் அழைப்பதாக சொல்லி வனத்துறையினர் வந்து என்னை அழைத்தார்கள். நான் ஜீப்புக்கு அருகில் சென்றவுடனே நான்கு வனத்துறையினர் என் கை, கால் களை பிடித்து ஜீப்பில் தூக்கி போட் டுவிட்டனர். நான் சத்தம் போடவும் ஜீப்பை எடுத்துக்கொண்டு 9/6 வனத் துறை சோதனைச்சாவடி அலுவ லத்திற்கு கொண்டு சென்றனர். 9/6 வனத்துறை செக்போஸ்டில் வைத்து என்னிடம் ரேஞ்சர் சிவக்குமார் கடு மையான முறையில் பேசியும், வாயில் வந்தபடி திட்டியும், உன் அப்பா எங்கே இருக்கிறார் சொல் லுடா? இல்லையென்றால் உன் வாழ்க்கையே முடிந்து விடும் என்று பேசினார். பின்பு நான் சொல்கிற எண்க ளுக்கு போன் செய், நான் சொல்கிற படி பேசவேண்டும் என்று சொன் னார். நான் முடியாது என்று சொன் னேன். உடனே இவன் மீது கஞ்சா கேஸ் போடுங்கள் என்று வலுக் கட்டாயமாக என் கையை பிடித்து ரேகையை பதிந்து கொண்டனர். இரண்டு மணி நேரத்திற்கு மேலாக என்னையும், என் தாய் தந்தை யாரை இழுவுபடுத்தி பேசினார். இப்போது நாங்கள் கோர்ட்டுக்கு அழைத்து செல்வோம். அப்போது நாங்கள் சொல்வதுபோல் கோர்ட் டில் சொல்ல வேண்டும். செல்வன் என்பவர் தான் உன் அப்பாவை வேலைக்கு கூட்டிக் கொண்டு போனார் என்று சொல்ல வேண்டும் என்றனர். எனக்கு தெரியாது என்று சொன்னேன். அப்படியென்றால் உனக்கு ஜெயில் உறுதி என்று சொல்லி மூலையில் உட்கார சொல்லி விட்டார்கள். அதன்பின் எங்கள் கிராமத்தில் இருந்து 50 பேர் வந்தனர். தலைவர்கள் போன் செய்த பின்பு என்னை விடுவித்த னர். மிகவும் கஷ்டத்தில் உள்ள குடும்பத்தில் இருந்து நான் கொஞ் சம் படித்துள்ளேன். என்னை பிடித்து கொண்டு போய் கேவலமான முறை யில் நடத்தியும், திட்டியும், பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கி கை, கால்களை கட்டி ஜீப்பில் தூக் கிப்போட்டு கொடுமைப்படுத்திய உடுமலைப்பேட்டை ரேஞ்சர் சிவக் குமார் மற்றும் வனத்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என் மீது பொய்யான புகாரை ஊர் முழுவதும் சொல்லி என்னை கேவலப்படுத்தி உள்ள னர். ஞாயிறன்று, எங்கள் உறவினர் வீடுகளுக்கு சென்று எங்களை மோசமான முறையில் வனத்துறை யினர் பேசி வருகின்றனர். மேலும் என் மீது வழக்கு போடுவதற்காக கைரேகையை பதிவு செய்துள்ள னர். எனவே, தாங்கள் தலையிட்டு எவ்வித குற்றமும் செய்யாத என்னை ஜீப்பில் தூக்கிப் போட்டு, என்னை மிகவும் மோசமான வார்த் தைகளால் பேசி இழிவுபடுத்தியும், கைரேகைகளை பதிவு செய்து என் மீது பொய் வழக்கு போடுவதற்காக ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ள உடுமலைப்பேட்டை வனத்துறை ரேஞ்சர் சிவக்குமார் மற்றும் துணை செல்லும் அலுவலர் மீது உரிய நடவ டிக்கை எடுத்து எங்கள் குடும்பத் தின் அமைதியான வாழ்க்கையை பாதுகாக்க உதவுமாறும் பணி வோடு கேட்டுக்கொள்வதாக கூறி யிருக்கிறார். இவருடன் இவரது தாயார் சுமதி மற்றும் வீரமணி, கடல் கன்னி ராசாத்தி உள்ளிட்ட ஊர் மக்க ளும் கலந்து கொண்டனர்.