சேலம், நவ.14- சேலம் மாநகராட்சி பகுதியில் பொது பயன்பாட்டுக்காக இருந்த சாலையை ஆக்கிரத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி யினர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் புகார் அளித்தனர். சேலம் மாநகராட்சி, 26 ஆவது வார்டிற்குட்பட்ட சாமிநாதபுரம், கௌரம்மாள் காலனி பகுதியில், 10 வருடத்திற்கு முன்பு வீட்டுமனைகள் பிரிக்கப்பட்டு, தற்போது நூற்றுக் கும் மேற்பட்டோர் வீடு கட்டி வசித்து வருகின்றனர். அப்போது 20 அடி அக லம், 100 அடி நீளம் கொண்ட சாலை பொது பயன்பாட்டுக்காக விடப் பட்டது. இந்நிலையில், தனி நபர் ஒரு வர் பொதுபயன்பாட்டுக்காக இருந்த சாலையை ஆக்கிரமித்து வீடு கட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. மேலும், காலியாக உள்ள இடத்தை சிலர் ஆக்கிரமித்து வீடு கட்ட முயற்சி எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனை கண்டித் தும், “பொது பயன்பாட்டுக்கு விடப் பட்ட சாலை காணவில்லை” எனக் கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் திங்களன்று புகார் அளிக் கப்பட்டது. இதுகுறித்து சிபிஎம் சேலம் வடக்கு மாநகர செயலாளர் என்.பிர வீன்குமார் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பொது பயன்பாட்டிற்காக இருந்த சாலையை சிலர் ஆக்கிரமித்து வீடு கட்டி வரு கின்றனர். மேலும் தற்போதுள்ள இடத்தை சிலர் ஆக்கிரமித்து ஆளுங் கட்சி பெயரை சொல்லி வீடு கட்ட முயற்சித்து வருகின்றர். இதனால், சாலை இல்லாத சூழ்நிலை ஏற்பட் டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட இடத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்து சாலையை மீட்டெடுக்க வேண்டும். இல்லையெனில் மக்களை திரட்டி மார்க்சிஸ்ட் கட்சி போராட்டத்தில் ஈடு படும், என்றார்.