திருப்பூர், ஜூன் 18 - பல்லடம் அருகே அனுமதியின்றி இயங்கியதாக தார் கலவை தொழிற்சா லைக்கு திருப்பூர் தெற்கு மாசு கட்டுப் பாட்டு வாரிய அதிகாரிகள்சீல் வைத்த னர். ஆனால் முன்னாள் அதிமுக எம் எல்ஏவின் உறவினருக்கு ஆதரவாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் செயல்படுவதாக இந்த ஆலை உரிமை யாளர் குற்றஞ்சாட்டி உள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் சுக்கம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஊஞ்சப்பாளையத்தில் தார் கலவை தொழிற்சாலை நடத்தி வருப வர் அழகையன். இவர் 2018-ஆம் ஆண்டில் இருந்து ஊஞ்சப்பாளை யத்தில் தார் கலவை தொழிற்சாலை நடத்தி வருகிறார். 2020ஆம் ஆண்டு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தார் கலவை தொழிற்சாலையை நடத்த உரிமம் பெற வேண்டும் என தெரிவித்ததால் அனுமதி பெறு வதற்கான ஆவணங்களை அதற் கான கட்டணத்தோடு இணைத்து மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் அளித்துள் ளார். ஆனால் இரண்டு வருடங்களாக உரிமம்அளிக்க தயக்கம் காட்டி வந்த மாசு கட்டுப்பாட்டு வாரிய அதி காரிகள் அவர் செலுத்திய காசோலை யையும் அவரிடமே திருப்பி அளித்து உள்ளனர். மேலும் இயங்காமல் இருந்த தார் கலவை தொழிற்சாலைக்கு மாசு கட் டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், பல் லடம் வட்டாட்சியர் ஆகியோர் சனி யன்று எவ்வித முன்னறிவிப்பும் இல் லாமல் திடீரென சீல் வைத்தனர். இதுகுறித்து தார் கலவை ஆலை உரிமையாளர் அழகையன் கூறுகை யில், 2020 ஆம் ஆண்டில் இந்த தார் கலவை தொழிற்சாலைக்கு உரிமம் கேட்டு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தில் 19 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையோடு விண்ணப்பித்தும், அனைத்து ஆவணங்களையும் முறை யாக சமர்ப்பித்தும் இரண்டு வருடங்க ளாக உரிமம் வழங்காமல் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இழுத்தடித்தனர். இன்று திடீரென எந்த ஒரு அறிவிப்பு ஆணையும் இல்லாமல் தார் கலவை தொழிற்சா லைக்கு சீல் வைத்துள்ளனர் என்றார். மேலும் முன்னாள் அதிமுக எம்எல்ஏ வின் உறவினர் ஒருவர் புதியகலவை தொழிற்சாலை ஆரம்பிப்பதற்காக, அவருக்கு ஆதரவாக மாசு கட்டுப் பாட்டு வாரிய அதிகாரிகள் செயல்படு வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.