மாணவர் உயிரிழப்பு: கல்லூரி முதல்வர் மீது புகார்
சேலம், ஜூலை 18- சேலம் அருகே கல்லூரி மாணவன் உயிரிழப்பிற்கு காரணமான கல்லூரி முதல்வர் உட்பட நான்கு பேர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து உற வினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம், அம்மாபேட்டை சத்யா நகர் சேர்ந்தவர் குமரன். இவரது மகன் பரத் (22) விநாயக மெஷின் கல்லூரி யில் பிடிஎஸ் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், கல்லூரியின் சார்பாக விளையாட்டு போட்டி நடை பெற்றன. அதில், கிரிக்கெட் போட்டியின்போது, இரண்டு அணிகளுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து, கல்லூரி நிர்வாகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. பின்னர் இரு தரப்பினரிடையே சமாதானம் ஏற்பட்டது. ஆனால், கல்லூரி நிர்வாகம், பரத் உட்பட ஐந்து மாண வர்கள் கல்லூரிக்குள் வரக்கூடாது என ஐந்து நாட்கள் வெளியே நிறுத்தி தண்டனை வழங்கி உள்ளது. இதனால் மன வேதனையடைந்த பரத் கடந்த 21ஆம் தேதி விஷம் அருந்தி யுள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர், மகனை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், திங்களன்று இரவு மாண வன் பரத் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, கொண்டலாம்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். இதற்கிடையே, உயிரிழந்த மாணவனின் உற வினர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கல்லூரி யில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியில் ஏற்பட்ட பிரச்சனையில் மாணவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இது மாணவருக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாகவே பரத் விஷமருந்தி தற்கொலை செய் துள்ளார். மாணவனின் இறப்பிற்கு காரணமான கல்லூரி முதல்வர் பேபி கவின், ஒருங்கிணைப்பாளர் மது ஸ்ரீ உள்ளிட்ட நான்கு பேர் தான். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையென்றால் உடலை வாங்க மாட் டோம் என்றனர். இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்து, போராட் டத்தை கைவிடச்செய்தனர்.
கோவை டிஐஜி தற்கொலை விவகாரம் கருத்து தெரிவித்த 2 பேரிடம் விசாரணை
கோவை, ஜூலை 18- டிஐஜி தற்கொலை விவகாரத்தில் 8 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், செவ்வாயன்று காவல் துறையினர் இரண்டு பேரிடம் விசாரணை மேற்கொண்டனர். கோவை சரக டிஐஜி விஜயகுமார், கடந்த ஜூலை 7 ஆம் தேதியன்று பந்தையசாலையிலுள்ள முகாம் அலுவலகத் தில் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். டிஐஜி விஜயகுமார் தற்கொலை தொடர்பாக கோவை, ராம நாதபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர்கள் அக்கம், பக்கத்தில் வசிப்பவர்கள், அவரது வீட்டில் இருந்த வர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி யுள்ளனர். தொடர்ந்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே டிஐஜி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக சிலர், சமூக ஊடகங்களில் தங்களது கருத்துக்களையும் தெரி வித்திருந்தனர். இந்நிலையில், டிஐஜி தற்கொலை தொடர் பாக சமூக ஊடகங்களில் தவறாக பதிவிட்டவர்கள், சமூக ஊட கங்களுக்கு பேட்டி அளித்தவர்கள் என 8 பேருக்கு போலீ சார் சம்மன் அனுப்பியுள்ளனர். அதில் கோவை, ராமநாதபுரம் காவல் நிலைய போலீசார் முன்பு விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. இதனடிப்படையில் செவ்வாயன்று இரண்டு நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கருத்துத் தெரி வித்திருந்த வாராகி மற்றும் ராஜவேல் நாகராஜ் என்ற இரண்டு நபர்களிடம் காவல்துறையினர் தற்போது விசாரணை மேற் கொண்டனர். இந்த இரண்டு பேரிடம் டி.ஐ.ஜி. தற்கொலை தொடர்பாக தெரிவித்த கருத்துகள் எந்தவித ஆதாரத்தின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டது? யார் அதனை தெரிவித் தது? உள்பட பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை மேற்கொண்டனர்.
டெலிகிராம் மூலம் பண மோசடி
கோவை, ஜூலை 18- அதிக கமிசன் தருவதாக டெலிகிராம் மூலம் வாலிபரி டம் ரூ.19.68 லட்சம் மோசடி செய்த நபரை காவல் துறை யினர் தேடி வருகின்றனர். கோவை - சத்தி சாலையிலுள்ள ஸ்வரா அடுக்குமாடி குடி யிருப்பைச் சேர்ந்தவர் கோகுல கிருஷ்ணன் (40). இவரது டெலிகிராமில் சில நாட்களுக்கு முன்பு ஆன்லைனில் வேலை இருப்பதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதைய டுத்து கோகுல கிருஷ்ணன் அதன் லிங்க்-கை கிளிக் செய்து, தனது விவரங்களை பதிவிட்டுள்ளார். பின்னர் அவரது செல் போன் எண்ணிற்கு அழைத்த ஒருவர் ‘டெலி பிலிம்’ நிறு வனத்தின் பிரதிநிதி என தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு, ஆன்லைனில் திரைப்படத்திற்கு ரேட்டிங் கொடுத்தால், அதி கமான லாபம் கிடைக்கும் என தெரிவித்துள்ளார். பின்னர், எந்தவிதமான முதலீடு செய்யாமல் அவருக்கு முதற்கட்ட மாக வங்கி கணக்கில் ரூ.2 ஆயிரம் அனுப்பப்பட்டது. அதன் பின் அதேநபர் அவரை தொடர்பு கொண்டு, சமையல் குறித்து ரேட்டிங் கொடுத்தால், அதிக லாபம் கிடைக்கும் என கூறி அதற்கான இணையதள முகவரியை கொடுத்துள்ளார். மேலும், இதில் நீங்கள் முதலீடு செய்யும் தொகைக்கு ஏற்ப சதவிகித அடிப்படையில் கமிசன் கிடைக்கும் எனவும் தெரி வித்துள்ளார். இதை நம்பிய கோகுல கிருஷ்ணன் அந்த நபர் கூறிய வங்கி கணக்கில் முதலில் ரூ.10 ஆயிரம் அனுப்பி யுள்ளார். அவருக்கு கமிசனுடன் சேர்ந்து ரூ.14,016 கிடைத் துள்ளது. அதன்பின் அவர் அந்த நபரின் வங்கி கணக்கில் சிறிது, சிறிதாக ரூ.19,68,066 வரை அனுப்பியதாக தெரிகி றது. ஆனால், அவருக்கு அந்த நபர் கூறியதுபோல், கமிசன் தொகை எதுவும் அனுப்பவில்லை. அந்த நபரை செல்போ னில் தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. இத னால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கோகுலகிருஷ்ணன், கோவை மாநகர குற்றப்புலனாய்வு பிரிவு காவல் நிலை யத்தில் புகாரளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து நூதன மோசடியில் ஈடுபட்ட நபரை தேடி வரு கின்றனர்.
வடுகபாளையம் இணைப்பு பாதைகளில் புதிய தார்ச்சாலை அமைக்க கோரிக்கை
திருப்பூர், ஜூலை 18 - அவிநாசி ஒன்றியம், வடுகபாளை யம் ஊராட்சிக்கு உட்பட்ட முக்கிய இணைப்புப் பாதைகளை பட்டியலில் இணைத்து புதிய தார்ச்சாலைகள் அமைத்துத் தர வேண்டும் என்று ஊர் மக்கள் கோரியுள்ளனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் திங்களன்று அப்பகுதி மக்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட் டது. இதில் கூறப்பட்டு இருப்பதாவது: வடுகபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள் பெரும்பா லும் விவசாயத்தை சார்ந்து வாழ்கின்ற னர். விளைபொருட்களை விற்ப னைக்கு கொண்டு செல்லவும், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லவும், பனியன் உள்ளிட்ட தொழிற்சாலைகளுக்குச் செல்லவும் சேவூர், அவிநாசி நகரப் பகுதிகளை பெரிதும் நம்பி உள்ளனர். ஆனால் போதுமான சாலை வசதி, இணைப்புச் சாலை இல்லாமல் அவதிப் பட்டு வருகின்றனர். எனவே ஊராட்சி ஒன்றிய சாலைகள் பட்டியலில் வடுக பாளையம் - கூட்டப்பள்ளி சாலை முதல் விநாயகா கார்டன் வழியாக முதலி பாளையம் - பஞ்சலிங்கம்பாளையம் சாலை வரை (தாலக்கரை) உள்ள 3 கிலோமீட்டர் மண்ச்சாலையை தார்ச் சாலையாக மாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
தொழிலாளி தற்கொலை
திருப்பூர், ஜூலை 18- பல்லடம் அருகே உள்ள பழனிகவுண்டம்பாளை யத்தை சேர்ந்த முத்துசாமி என்பவரது மகன் ஞானசே கரன் (43). மண்பாண்ட தொழிலாளி. இவரது மனைவி சோலை லட்சுமி (33). செவ்வாயன்று தாராபு ரத்தில் உள்ள அவர்களது குலதெய்வ கோவி லுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் அருகில் இருந்த வர்கள் அவருக்கு போன் செய்து ஞானசேகரன் விஷம் குடித்து விட்டு மயங்கிய நிலையில் கிடப்ப தாக தக வல் தெரிவித்தனர். பின்னர் ஞானசேகரனை அருகில் இருந்த வர்கள் சிகிச்சைக் காக பல்லடம் அரசு மருத் துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஞான சேகரன் பரிதாபமாக உயிரி ழந்தார்.