ஈரோடு காவிரி ஆற்றின் அருகே அமைந்துள்ள மாநகராகும். கீழ் பவானி கால்வாய் செல்கிறது. விவ சாயம் நிறைந்த பகுதி. விவசாயம் சார்ந்த தொழில்கள் அதிகரித்துள்ளது. சிப்காட் உள் ளிட்ட தொழிற்பேட்டைகள் அருகில் அமைந் துள்ளன. இந்நிலையில், வழக்கமான வெப்ப நிலைக்கு மாறாக இந்த ஆண்டு இந்திய அள வில் முதலிடத்தை நோக்கி உயர்ந்து கொண்டே செல்கிறது.
இதற்கான காரணங்கள் குறித்து கல்வியாளர்கள், அறிவியலாளர்கள், மருத்துவர்களிடம் பேசுகையில்..
கல்லூரியின் முன்னாள் முதல்வர் ஜெய்சங்கர் கூறியதாவது,
காலநிலை மாறுபாடு குறிப்பாக வெப்ப நிலை அதிகரிப்பது உலகளாவிய பிரச்சனை. அதுகுறித்து எல்நினோ பல பொருள்களில் கூறப்படுகிறது. தற்போது பல நகரங்களிலும் அனல் காற்று வீசி வருகிறது. ஆனால் தமிழ் நாட்டில் குறிப்பாக ஈரோட்டில் நிலவும் வெப்ப நிலை வேறு எங்குமில்லை. இதற்கு மிக முக் கிய காரணம் என்னவென்றால், இயற்கை யோடு ஒன்றி போகாத வாழ்க்கை முறையை, அதை மிக துரிதப்படுத்திக் கொண்டிருக்கி றோம் என்றே கூற வேண்டும். ஈரோடு ரயில் நிலையப் பகுதியில் ஏராளமான மரங்கள் இருந்தன. இங்கு மாலை நேரங்களில் ஏராள மான குருவிகள், பறவை இனங்கள் அவற் றில் தங்கி வந்தன. அவற்றையெல்லாம் தற் போது அழித்துவிட்டனர். மாநகரங்களுக்குள் தான் இந்நிலை என் றால் புறநகர் பகுதியில் குறிப்பாக சாலை ஓரங்களில் வைக்கப்பட்டு இருந்த மரங்கள் அனைத்தும் வெட்டப்பட்டு விட்டன. மேலும், ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் சாலையில் ஸ்டெ யின்லெஸ் ஸ்டீல் தடுப்புகள் அமைப்பது. வீதி பெயர்கள் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பலகையில் ஸ்டிக்கர் ஒட்டி வைப்பது இவற்றிற்கு பல லட் சங்கள் செலவாகும். மரம் இருந்த இடத்தில் அவற்றை வெட்டிவிட்டு இரும்பை நட்டு வைப்பது நடைபெறுகிறது. இந்தியாவில் மிக நவீனமான நகரம் மும்பை எனக் கூறலாம். ஆனால் அங்கு பல நவீன வசதிகள் இருக்கின்றன. அங்கு இயற்கை பாதுகாக்கும் நட வடிக்கைகள் இருக்கிறது. மும்பை யில் அரே காலனி என்ற பகுதி உள் ளது. அது ஆதிவாசிகள் வாழ்ந்த பகுதி என்று கூறப்படுகிறது. இன்றும் அங்கு பழங்குடியின மக்கள் வசிப்பதாக கூறப்படுகிறது. அங்கு லட்சக்கணக் கான மரங்கள் இருக்கிறது. அங்கு மெட்ரோ ரயில் பாதை அமைப்பதற்கும் ஒரு துணை ரயில் நிலையம் அமைப்பதற்குமான பணிகள் நடைபெற்றது. இதனையொட்டி அங் குள்ள பாதி மரங்கள் வெட்டப்பட்டது. இதனை எதிர்த்து அங்கு நடைபெற்ற போராட்ங்களின் விளைவாக திட்டத்தை கைவிட்டது அந்த அரசு.
இயற்கையோடு ஒன்றி போகாத வாழ்க்கை தவறினால் இது போன்ற சிக்கல்கள் வரும் அது தவிர்க்க முடியாது. குளோபல் வார்மிங் எனப்படும் பூமி சூடாவது குறித்து கடந்த 1992 ஆம் ஆண்டிலேயே ரியோ டி ஜெனிரோ வில் நடைபெற்ற மாநாட்டில் விஞ்ஞானிகள், வல்லுனர்கள் எச்சரித்தனர். ஆனாலும் அதை தடுப்பதற்கான வழிகளை விடுத்து, மேலும் பூமி வெப்பநிலை அதிகரிப்பதற்கான வேலைகளை ஈடுபட்டு வருகிறோம். இயற்கை வளங்களை சுரண்டுவது, அசுரத்தனமாக பகாசுரத்தன மாக நடைபெற்று வருகிறது. வெயிலின் தாக்கத்தால் ஒரு மின் விசிறி ஓடிய இடத்தில் 3 மின் விசிறிகளும், ஒரு ஏசி ஓடிய இடத்தில் இன்று மூன்று ஏசிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. சாதாரண மக்கள் பயன் படுத்தி வந்த ஸ்லீப்பர் கிளாஸ் எனப்படும் ரயில் பெட்டிகளில் இப்பொழுது அது குறைக்கப் பட்டுள்ளது. ஏசி கோச்சுகள் நிறைய இணைக் கப்பட்டுள்ளன. இதனால் ஏற்படும் சுற்றுச் சூழல் மாசு, அதனால் ஏற்படும் பாதிப்புகள் அதிகம். எனவே, இயற்கையான காலநிலை மாறு பாடு ஏற்படுவது உலகம் முழுவதும் உள்ள பிரச்சனை. அதனை வல்லுநர் கள் கூறியபடி நாம் எதிர் கொள்ள தவறி உள்ளோம். தவறியதோடு மட்டுமன்றி எதிர்மறையான செயல்கள் லாப நோக்கோடு அதிகரித்து வருகிறது என் றார்.
எப்படி தற்காத்துக்கொள்வது?
கோவையைச் சேர்ந்த பிரபல தோல் நோய் மருத்துவ நிபுணர் கனிகா கூறுகையில், 20 வருடங்க ளுக்கு பிறகு தற்போது 40 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவாகியுள்ளது. வெப்ப அலைகளிலிருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட் டிருக்கிறது. வெப்ப அலையால் உடலில் நீர் வற்றி போவதை தடுக்க அதிகளவில் தண்ணீர் பருக வேண்டும். ஆன்ட்டி ஆக்சைடு மற்றும் சிட்ரஸ் அதிகம் இருக்கும் பல வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். குளிர்பானங் களை தவிர்த்து இளநீர் போன்ற இயற்கையான பானங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். வெளியே வரும்போது தோலுக்கு பாதுகாப்பு கொடுக்கும் ஸ்கின் கிரீம்களை பயன்படுத்த வேண்டும். முடிந்தவரை முழு கை சட்டை அணிந்து கொள்வது கடும் வெப்பத்திலிருந்து பாதுகாப்பை கொடுக்கும். வெளியில் அதிக மாக சுற்றுபவர்கள் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை சன் கிரீம்களை பயன்படுத்தலாம். மேலும், ஜீன்ஸ் போன்ற இறுக்கமான ஆடை களை பயன்படுத்துவதை தவிர்த்து காட்டன் உடைகளை அணியலாம். கடும் வெப்பத்தால் வேர்க்குரு, படர்தாமரை உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் போது உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இரண்டு வேளை குளிப் பது உடல் வெப்பத்தை தணிக்கும். குளித்த தற்கு பிறகு தலையில் தேங்காய் எண்ணெய் வைப்பது தவிர்க்க வேண்டும். எண்ணெயுடன் வியர்வை சேரும் போது தோலுக்கு அதிகள வில் பாதிப்பை ஏற்படுத்தும், என்றார்.