உடுமலை, நவ.18- தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு உடுமலை மாதிரி முதற்கிளை நூலக வாசகர் வட்டம் சார்பில் சோமவாரபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கட்டுரைப் போட்டி மற்றும் பேச்சுப்போட்டி நடைபெற் றது. “நூலகம் - அறிவுத்திருக்கோவில்”, “புத் தக வாசிப்பு” ஆகிய தலைப்புகளில் கட்டு ரைப்போட்டி மற்றும் “உன்னை கவர்ந்த புத்தகம்” எனும் தலைப்பில் பேச்சு போட்டி நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசி ரியை கே.கோப்பெருந்தேவி தலைமை வகித்தார். ஆசிரியைகள் ஆலிஸ் திலகவதி, மனோகரி, ராஜம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நூலகர்கள் அபிரா மசுந்தரி , பீர்பாஷா, நூலக வாசகர் வட்டத் தலைவர் க.லெனின்பாரதி, பொருளாளர் எஸ்.சண்முகசுந்தரம் ஆகியோர் தேசிய நூலக வார விழா நிகழ்வுகளை ஒருங் கிணைத்தனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கான பரிசளிப்பு விழா உடுமலை மாதிரி நூலகத்தில் நடைபெறும்.