districts

img

மின் சிக்கனம் குறித்த போட்டி: பாராட்டு

தருமபுரி, டிச.6- மின் உற்பத்தி மற்றும்  பகிர்மான கழகம், தமிழ்நாடு  அறிவியல் இயக்கம் ஒருங்கி ணைப்பில் நடைபெற்ற மின்  சிக்கனம் குறித்த போட்டியில் வெற்றி பெற்றவர்க ளுக்கு பாராட்டு தெரிவித்து,  சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மின் ஆற்றல், மின் சிக்கனம், மின் பாது காப்பு ஆகிய தலைப்புகளில் அரசு பள்ளி  மாணவர்களுக்கிடையே பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு அறி வியல் இயக்கம் ஒருங்கிணைப்பில் நடை பெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி தருமபுரி அரசு அவ்வையார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் (பொ) எஸ்.சர வணன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலா ளர் பெ.துரைராஜ் வரவேற்றார். மாவட்ட  முதன்மை கல்வி அலுவலர் ஐ.ஜோதிசந் திரா, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,  மாணவியருக்கு பாராட்டு சான்றிதழ்கள், கேடயம் வழங்கி சிறப்புரையாற்றினர். இதில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர்கள் செந்தில் முருகன், ஹரிகரன், மலர்விழி, பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஜோதி லட்சுமி, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட் டத் தலைவர் மா.பழனி, நிர்வாகிகள் ம.அருள் குமார், மீரா, மஞ்சு பிரியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.