districts

கை விரல்களை இழந்த தொழிலாளிக்கு இழப்பீடு

ஈரோடு, அக்.5- சிஐடியு முயற்சியால் தோல் தொழிற்சாலையில் நடைபெற்ற விபத்தில் கை விரல்களை இழந்த  தொழிலாளிக்கு இழப்பீடு கிடைத் தது. ஈரோடு மாவட்டம், சூரம்பட்டி வலசு, சங்கு நகர் பகுதியைச் சேர்ந் தவர் கபீர் மகன் கே.அக்பர் (47). இவர் பி.பெ.அக்ரஹாரத்தில் உள்ள தோல் பதனிடும் தொழிற்சாலை யான முகமது இஸ்மாயில் டேனரி என்னும் நிறுவனத்தில் சல்லா  மிசின் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். வழக்கம் போல் வேலைக் குச் சென்ற அக்பருக்கு கடந்த 2018 ஏப்ரல் 26 அன்று பணி நேரத்தில் விபத்து ஏற்பட்டது. இதில் அவரது இடதுகை கட்டை விரலும், ஆள் காட்டி விரலும் துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து 1923 ஆம் வருடத்திய பணியாளர் இழப்பீட்டு சட்டம் பிரிவு 10(1)ன்படி இழப்பீடு வழங்க வேண்டு மென கோரினார். மேற்படி நிறு வனத்தார் தொழிலாளியின் கோரிக் கையை ஏற்கவில்லை. எனவே, பணியாளர் இழப்பீட்டு ஆணையர் மன்றத்தில் (குன்னூர்) முறையிட் டார். அவரது முறையீடு ஏற்றுக் கொள்ளப்பட்டு வழக்கு நடைபெற் றது. வழக்கின் தீர்ப்பு கடந்த 2021 அக்.4 ஆம் தேதியன்று அளிக்கப் பட்டது. அதில், வேலை நேரத்தில் ஏற்பட்ட விபத்தில் எனது கை விரல் கள் துண்டிக்கப்பட்டதால் திறனி ழப்பு ஏற்பட்டதையும், திறனிழப்பிற் கான இழப்பீடாக ரூ.2 லட்சத்து 61 ஆயிரத்து 173 விபத்து ஏற்பட்ட தேதி யிலிருந்து 12 விழுக்காடு வட்டி கணக் கிட்டு வழங்க வேண்டும் என கூறப் பட்டது. இத்தீர்ப்பின்படி தனக்கு இழப் பீட்டுத் தொகை வழங்க வேண்டு மென கேட்டு மேற்படி தொழிற் சாலை நிர்வாகத்தை அனுகி னார். ஆனால், இழப்பீட்டு தொகை யும் எதுவும் வழங்கப்படவில்லை. மாறாக மிகக்குறைந்த தொகை யைப் பெற்றுக் கொள்ள வேண்டு மென நிர்பந்தப்படுத்தினர். அக்பர் நிர்பந்தத்தை ஏற்காத நிலையில் தீர்ப்பளித்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தது. இதனிடையே இந்திய தொழிற்சங்க மையத்தை (சிஐடியு) நாடினார். சிஐடியு மாவட் டத் தலைவர் எஸ்.சுப்ரமணியன், உதவித்தலைவர் பெ.கனகராஜ் உள்ளிட்டோர் எடுத்த தொடர் முயற் சியை அடுத்து, பாதிக்கப்பட்டவ ருக்கு, தீர்ப்பின்படி இழப்பீடு பெற் றுத்தரப்பட்டது.