districts

விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமரச தீர்வு மூலம் இழப்பீடு

சேலம், ஆக.12- விபத்தில் பாதிக்கப்பட்டவர் களுக்கு சமரச தீர்வு மையம் மூலம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.  சேலம் மாவட்டத்தில் சமரச தீர்வு மையம் எனும் மக்கள் நீதி மன்றம் மாதந்தோறும் முதல் வாரத் தில் நடைபெறும். அதன்படி. சனி யன்று அஸ்தம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளா கத்தில் நடைபெற்றது. இதில், நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து  முடிப்பதற்காக இரு தரப்பினரை யும் அழைத்து சமரச முறையில் தீர்வு காணப்பட்டது.  இந்நிலையில், கடந்த 2022ஆம்  ஆண்டு மணிராஜன், சன்மார் கெமிக்கல் நிறுவனத்தில் பணி யாற்றினார். இவர் திருச்சி - மதுரை  தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றார். அப்போது இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் தலை யில் காயம் ஏற்பட்டது. இதனால்  கை, கால்கள் செயல் இழந்தன.    இந்த விபத்து குறித்த வழக்கில் சமரசத் தீர்வு காணப்பட்டு, பாதிக் கப்பட்ட நபருக்கு  ரூ.80 லட்சம் இழப் பீட்டிற்கான காசோலையை மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி வழங்கினார். இதேபோல, கடந்த 2021ஆம் ஆண்டு குரு என்பவர் இரு சக்கர  வாகனத்தில் சேலம் - ஓமலூர் தேசிய  நெடுஞ்சாலை சென்று கொண்டி ருக்கும்போது பின்னால் வந்த ஆட்டோ மோதிய விபத்தில் கால்  எலும்பு முறிந்தது. இந்த வழக்கில்,  சமரச தீர்வாக, குருவுக்கு ரூ.23 லட் சத்திற்கான காசோலை வழங்கப் பட்டது.  இதேபோல், செல்வம் என்பவர் கடந்த 2022ஆம் ஆண்டு மேட்டூர், மால்கோ நிறுவனத்தின் லாரியை நிறுத்திவிட்டு அலுவலகத்திற்குச் சென்றபோது பாம்பு கடித்தது. இந்த வழக்கில் சமரசத் தீர்வு காணப்பட்டு ராயல் சுந்தரம் காப் பீட்டு நிறுவனம் மூலம் ரூ.10 லட்சத் திற்கான காசோலையை மாவட்ட  முதன்மை நீதிபதி சுமதி வழங் கினார். இதில், நீதிபதி சரண்யா மற்றும்  மாவட்ட சட்டப் பணி ஆணைக் குழு  செயலாளர் தங்கராஜ்,  வழக்கறி ஞர்கள் ரகுபதி, உமா மகேஸ்வரி ஆகியோர் உடனிருந்தனர்.