நாமக்கல் ஆக.13- 19 ஆண்டுகளாக அசல் ஆவ ணத்தை வழங்காமல் இழுத்தடித்து வந்த நிறுவனம் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க நாமக்கல் நுகர் வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது. நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே உள்ள ஆனங்கூர் கிராமத்தில் வசிப்பவர் தங்கவேல் (82). இவருக்கு சொந்தமான விவ சாய நிலத்தின் அசல் ஆவணத்தை அடமானம் வைத்து எல்ஐசியில் 1992 ஆம் ஆண்டு ரூ.65 ஆயிரம் வீட்டுக் கடன் பெற்றுள்ளார். இவர் கடன் ஒப்பந்தப்படி, மாதாந்திர தவ ணைத் தொகைகளை செலுத்தாத தால், வீட்டு கடன் நிறுவனம் நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய் துள்ளது. நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புப்படி கடனின் அசல், வட்டி மற்றும் வழக்கு செலவுத்தொகை முழுவதையும் தங்கவேல் கடந்த 2004 ஆம் ஆண்டு கடன் வழங்கிய நிறுவனத்துக்கு செலுத்தி விட்டார். அசல் ஆவணத்தை ஒரு மாதத்தில் திருப்பி அளிப்பதாக கடன் வழங் கிய நிறுவனம் உத்தரவாதம் அளித் துள்ளது. பின்னர், தங்கவேல் கடந்த 2016 ஆம் ஆண்டு சொத்தை விற்பனை செய்ய முயற்சித்த போது, அசல் ஆவணம் கடன் வழங்கிய நிறுவ னத்தில் இருந்து பெறப்படவில்லை என்பதை அறிந்துள்ளார். 2016 ஆம் ஆண்டு கடன் வழங்கிய வீட்டு கடன் நிறுவனத்தை அணுகிய போது, அசல் ஆவணத்தை ஒரு மாதத்தில் திருப்பி அளிப்பதாக தெரிவித்துள் ளது. ஆனால், குறிப்பிட்டபடி வழங்க வில்லை. பலமுறை கேட்டும் திரும்ப வழங்காததால், கடந்த 2023 மே மாதத்தில் தங்கவேல் வீட்டுக்கடன் நிறுவனத்திற்கு மீண்டும் ஆவ ணத்தை திரும்ப வழங்குமாறு கடி தம் அனுப்பியுள்ளார். இதன் பின்ன ரும் ஆவணத்தை அந்த நிறுவனம் திரும்ப வழங்க வில்லை. இதனைய டுத்து, நாமக்கல் மாவட்ட நுகர் வோர் நீதிமன்றத்தில், நிறுவனத் தின் மீது கடந்த 2023 டிசம்பரில் வழக்கு தாக்கல் செய்தார். அசல் ஆவணத்தை திரும்ப வழங்குவ தில் ஏற்பட்ட கால தாமதத்திற்கு தாங்கள் காரணம் அல்ல என வீட்டுக்கடன் நிறுவனம் நீதிமன்றத் தில் வாதிட்டது. இந்த வழக்கில் செவ்வாயன்று நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி வீ. ராமராஜ், உறுப்பினர்கள் ஆர். ரமோலா, என்.லட்சுமணன் ஆகி யோர் ஆகியோர் வழங்கிய தீர்ப் பில் எல்ஐசி வீட்டு வசதி கடன் நிறுவனம் சேவை குறைபாடு புரிந் துள்ளதாக தெரிவித்துள்ளார்கள். இதனால், வாடிக்கையாளர் கடனை திருப்பி செலுத்திய பின் னரும் 19 ஆண்டுகள் அவரது அசல் ஆவணங்களை திரும்ப வழங்கா மல், இருந்த எல்ஐசி வீட்டு வசதி கடன் நிறுவனம் வாடிக்கையாள ருக்கு நான்கு வாரங்களுக்குள் அவ ரது அசல் ஆவணத்தையும், அவ ருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற் றும் சிரமங்களுக்கு இழப்பீடாக ரூ.5 லட்சத்தையும் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. நான்கு வாரங் களுக்குள் அசல் ஆவணத்தை வழங்க தவறினால் காலதாமதம் செய்யும் ஒவ்வொரு நாளுக்கும் ரூபாய் ஐந்தாயிரத்தை இழப் பீட்டுத் தொகை ரூபாய் 5 லட்சத்து டன் சேர்த்து வழங்க வேண்டும் என் றும் உத்தரவில் தெரிவிக்கப்பட் டுள்ளது. இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு அபராதம் இதே போன்று, எல்.ஐ.சி. நிறுவ னம் மீது சங்ககிரி அருகே உள்ள பச்சாம்பாளையம் கருக்கங்காட் டில் வசிக்கும் ராமசாமி மகன் செல்வகுமார் தாக்கல் செய்திருந்த மற்றொரு வழக்கில் ஹெல்த் இன் சூரன்ஸ் பாலிசிப்படி பணத்தை வழங் காத இன்சூரன்ஸ் நிறுவனம் வழக்கு தாக்கல் செய்த வாடிக்கை யாளருக்கு மருத்துவச் செலவுக் காக ரூ.88 ஆயிரமும், சேவை குறை பாட்டுக்காக ரூ.50 ஆயிரம், இழப் பீடு ரூ.50 ஆயிரமும் வழக்கின் செல வுத் தொகையாக ரூ.10 ஆயிரமும் ஆக மொத்தம் ரூ.1,44,000யை நான்கு வாரங்களுக்குள் வழங்க நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.