திருப்பூர், நவ. 7 - வெள்ளகோவில் நகராட்சிக்கு உட்பட்ட தீத்தம்பாளை யத்தில் சமுதாய நலக்கூடம் அமைத்துத் தரும்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நகர சபா கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. வெள்ளகோவில் நகராட்சியில் அண்மையில் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில், சிவநாதபுரம் பஸ் நிறுத்தத்தில் நிழற் குடை அமைத்து தரவும், விளையாட்டு மைதானம், தீத்தம்பாளையத்தில் சமுதாய நலக்கூடம், சுடுகாட்டுக்கு சுற்றுச்சுவர், ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி முன்பு வேகத்தடை அமைக்கவும் வலியுறுத்தி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கட்சியின் தாலுக்கா (பொறுப்பு) செயலா ளர் கே.திருவேங்கடசாமி, தாலுகா கமிட்டி உறுப்பினர் ராதா கிருஷ்ணன், கிளைச் செயலாளர் லோகேஸ்வரன், கிளை உறுப்பினர் தண்டபாணி மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.