திருப்பூர், நவ. 4 - மொழிவாரி மாநிலம் அமைப்ப தில் சுதந்திரப் போராட்ட காலத் தில் இருந்தே தெளிவான கொள் கையுடன் உறுதியாக செயல்பட்டு வருபவர்கள் கம்யூனிஸ்டுகள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் க.சுவாமி நாதன் கூறினார். தமிழ்நாடு அமைப்பு தினத்தை முன்னிட்டு கடந்த புதனன்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகமான தியாகி பழனிசாமி நிலையத்தில் தமிழ் மொழி வளர்ச்சி நாள் சிறப்புக் கருத்தரங்கம் வடக்கு மாநகரச் செயலாளர் பி.ஆர்.கணே சன் தலைமையில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் க.சுவாமிநாதன் பேசியது வருமாறு: தேசிய இயக்கம் எழுச்சி பெறுவ தற்கு, பிராந்திய இணைப்பு சக்தி கள் சிறப்பாக செயல்பட்டது முக் கிய காரணமாகும். மொழிவாரி மாநி லம் என்பது வெறும் பூகோள அடிப் படையில் ஆனது மட்டுமல்ல. ஜன நாயகம், சமச்சீரான பொருளாதார வளர்ச்சி, முடிவெடுப்பதில் மக்க ளின் பங்கேற்பு, வர்க்க ஒடுக்கு முறை எதிர்ப்பு போராட்டம் ஆகிய வற்றில் இது மிக முக்கிய பங்காற்று கிறது. இந்த தெளிவான புரிதலுடன் தான் கம்யூனிஸ்டுகள் சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்து மொழி வாரி மாநில பிரச்சனையில் தெளி வான உறுதியான நிலைபாடு எடுத்த னர். இதை சிதைப்பதற்கு அப்போ தும், இப்போதும் வர்க்க எதிரிகள் தொடர்ந்து முயற்சி செய்து வரு கின்றனர். விடுதலைப் போராட்ட காலத் தில் மொழிவாரி மாநிலங்களை ஆத ரித்த நேரு போன்றவர்கள் கூட நாடு விடுதலை பெற்ற பிறகு தடுமாறி னார். முதலாளித்துவ சிந்தனை கொண்டவர்களால் தடுமாற்றம் இன்றி தெளிவாக பயணிக்க முடி யாது. மொழிவாரி மாநிலம் பிரச்சனை என்பது 200 ஆண்டுகள் முன்பு துவக்க புள்ளி கொண்டது. பிரிட் டிஷ் ஆட்சி காலத்தில் ஆங்கில கல்விக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மொழி பன்மைத்து வம் ஆங்கில ஆதிக்கத்திற்கு சவால் விடுவதாக பிரிட்டிஷார் அச்சம் கொண்டனர். மொழிவாரி மாநிலங் களாக பிரித்தால் பிரிட்டிஷ் ஆதிக் கத்திற்கு பெரும் தடையாக இருக் கும் என்று அவர்கள் கருதினர். நாடு விடுதலை பெற்றதற்குப் பிறகு இப்பிரச்சனை பற்றி ஆலோ சிப்பதற்காக இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டன. ஆனால் அவை மொழிவாரி மாநிலம் அமைப்பதை ஏற்றுக் கொள்ளவில்லை. இதற்கு பிறகுதான் மொழிவாரி மாநிலங் கள் அமைப்பதற்கான எழுச்சி போராட்டங்கள் நடைபெற்றன.
விசால ஆந்திரா, நவ கேரளா, ஐக் கிய தமிழகம், ஐக்கிய ஆந்திரா, சம் யுக்த மகாராஷ்டிரா, மகா குஜராத் என போராட்டங்கள் முன்னெடுக் கப்பட்டன. இந்தப் போராட்டங்க ளில் எல்லாம் கம்யூனிஸ்டுகள் முக் கிய பங்கு வகித்தனர். மொழிவாரி மாநிலம் அமைந்தால் ஒற்றுமை சிதைந்து விடும் என்ற வாதத்தை முன்வைத்த போது, தேச ஒற்று மையை பாதுகாக்க மக்களின் தன் இயல்பான ஒத்துழைப்பு தேவை, அதற்கு மொழிவாரி மாநிலங்கள் அமைவது அவசியம் என்று உறுதி யாக கூறியது கம்யூனிஸ்ட் கட்சி. மொழிவாரி மாநிலம் அமைப் பது என்பது முதலாளித்துவ நிலப் பரப்புத்துவ அமைப்புக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாகும். மொழிவாரி மாநிலம் அமைக்கப் படும்போது அதற்குள் இருக்கும் மொழி சிறுபான்மையினரின் உரி மையை பாதுகாப்பது பற்றியும் கம் யூனிஸ்ட்கள் தெளிவான நிலை கொண்டிருந்தனர்.
கம்யூனிஸ்டுகள் மொழிவாரி மாநிலம் குறித்து வெளியிட்ட ஆவ ணம் மிகத் தெளிவாக இருந்தது. அதேபோல் இந்த கோரிக்கைக் காக போராட்ட களத்திலும் ரத்தம் சிந்திய தியாக வரலாறு கொண்டது கம்யூனிஸ்ட் கட்சி. மொழிவாரி மாநில கோரிக்கை அடிப்படையில் தமிழ்நாடு அமைக்கப் பெற்றதில் வேறு எந்த இயக்கத்தை விடவும் உரிமையோடு கொண்டாடும் தகுதி பெற்றது கம்யூனிஸ்ட் கட்சி. இந்துத்துவம் மற்றும் தாராள மய உலகமய பொருளாதாரக் கொள்கை ஆகிய இரண்டிற்கும் எதிரானது மொழிவாரி மாநிலம். இந்துத்துவம் மற்றும் தாராளமயம் இரண்டும் மொழிவாரி மாநிலங் களை சிதைப்பதில் ஒரே புள்ளியில் இணைகின்றன. இந்துத்துவ சக்திக ளுக்கு இந்து என்ற பொது அடையா ளத்தில் அணி திரட்டுவதற்கு மொழி அடையாளம் குறுக்கே நிற்கிறது. எனவே மொழிவாரி மாநிலங்களை சிறு சிறு மாநிலங்களாக சிதைப்ப தற்கு அவர்கள் முயற்சிக்கின்றனர். அதேபோல் உலகமயக் கொள்கை என்பதன் மூலம் ஒரே நாடு என்பதை ஒரே சந்தையாக பார்க்கின்றனர். சமச் சீரற்ற பொருளாதார வளர்ச்சிக்கு எதிரான போராட்டம் எழுவதை அவர்கள் எதிர்க்கின்றனர். எனவே விடுதலை, ஜனநாய கம், சமச்சீரான பொருளாதார வளர்ச்சி, இந்திய தேச ஒற்றுமை, பன்மைத்துவம் ஆகியவற்றுடன் இணைந்தது மொழிவாரி மாநிலம். இதை உருவாக்குவதிலும், பாது காப்பதிலும் கம்யூனிஸ்டுகளின் பங்கு தனித்துவமானது. இந்த பெரு மைமிகு வரலாறை இன்றைய மக் களுக்கு தெரிவிக்க வேண்டும். இவ் வாறு க.சுவாமிநாதன் கூறினார். இந்த நிகழ்வில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ராஜ கோபால் உரையாற்றினார். திரளா னோர் கலந்து கொண்டனர்.