districts

img

‘அடக்குமுறைக்கு அஞ்சாதவர்கள் கம்யூனிஸ்ட்கள்’ என்பதை நிரூபித்தவர் தோழர் என்.சங்கரய்யா

ஈரோடு, நவ.16- “எத்தகைய அடக்குமுறைக்கும் அஞ்சாதவர் கள் கம்யூனிஸ்டுகள்” என்று நிரூபித்து வாழ்ந்து காட்டியவர் தோழர் என்.சங்கரய்யா என அனைத் துக்கட்சியினர் அவருக்கு புகழஞ்சலி செலுத்தி னர். சுதந்திரப்போராட்ட தியாகி, உழைக்கும் மக் களின் சிம்ம குரல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியை நிறுவிய தலைவர்களில் ஒருவர், தகை சால் தமிழர் தோழர் என்.சங்கரய்யா புதனன்று காலமானார். அவரது மறைவிற்கு இரங்கல் தெரி வித்து, தமிழகம் முழுவதும் உழைக்கும் மக்கள், அனைத்து கட்சியினர் இரங்கல் இயக்கங்களை நடத்தி வருகின்றனர்.  இதன்ஒருபகுதியாக, ஈரோடு மாவட்டம், பவானியில் அனைத்துக்கட்சி சார்பில் இரங் கல் ஊர்வலம் நடைபெற்றது. பவானி பேருந்து நிலையத்தில் தொடங்கிய அமைதி ஊர்வலம், பாத்திரக்கடை வீதி, பழனியாண்டவர் கோவில் வழியாக அந்தியூர் பிரிவை அடைந்தது. அங்கு நடைபெற்ற இரங்கல் கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் எஸ். மாணிக்கம் தலைமை வகித்தார். இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன், திமுக நகர பொருளாளர் கு. செல்வராஜ், தமிழ் புலிகள் கட்சியின் வடக்கு  மாவட்டச் செயலாளர் வேங்கை பொன்னுச்சாமி, விசிக தொகுதி செயலாளர் ஆற்றலரசு ஆகி யோர் இரங்கல் உரையாற்றினர். இதில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் ஜெகநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் சந்திர சேகரன், திமுக நகரச் செயலாளர் ப.சி.நாகரா ஜன், இளைஞர் மன்ற செயலாளர் தவமணி மற் றும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர்கள் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று, சிபிஎம் கடம்பூர் மலை வட்டார கமிட்டி அலுவல கத்தில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்திற்கு சின் னச்சாமி தலைமை வகித்தார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் ப.மாரிமுத்து இரங்கல் உரை யாற்றினார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் துரைசாமி, மின் ஊழியர் சங்க செயலாளர் கே.பாண்டியன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு, சங்கரய்யாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

உதகை

உதகை மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இரங்கல் கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் ஏ.நவீன்சந்திரன் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயலா ளர் வி.ஏ.பாஸ்கரன், மாவட்ட செயற்குழு உறுப் பினர் எல்.சங்கரலிங்கம், மூத்த தோழர் கே. ராஜேந்திரன், வி.மைக்கேல் அஞ்சலி உரையாற் றினர். இதில் பல்வேறு வெகுஜன அரங்கங்க ளைச் சேர்ந்த தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நாமக்கல்
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் அனைத்துக்கட்சி சார்பில் மௌன ஊர்வலம், மார்க்சிஸ்ட் கட்சியின் ஆவரங்காடு கிளை அலு வலகத்திலிருந்து துவங்கியது. இந்நிகழ்விற்கு கட்சி செயலாளர் ஆர்.ரவி தலைமை வகித்தார். முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம் பள் ளிபாளையம் பேருந்து நிலையம் அருகே நிறைவு பெற்றது. இதையடுத்து நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் அனைத்துக்கட்சி தலைவர்கள் பங் கேற்றனர். இதேபோன்று அனைத்துக்கட்சி சார் பில் திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே இருந்து துவங்கிய மௌன ஊர்வலம், நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் அண்ணா சிலை அருகே நிறைவு பெற்றது. இதில் திமுக,  காங்கிரஸ், மதிமுக, சிபிஐ மற்றும் தொழிற்சங் கங்களைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண் டனர். இதேபோன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி சார்பில் மாவட்டத்தில் பல்வேறு இடங்க ளில் சங்கரய்யாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தருமபுரி
தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு அனைத்துக்கட்சி சார்பில், தோழர் என்.சங்க ரய்யா உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்விற்கு சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.மாரிமுத்து தலைமை வகித்தார். இதில் காங்கிரஸ் மாவட் டத் தலைவர் பி.தீர்த்தராமன், திராவிடர் கழக  அமைப்பு செயலாளர் ஊமை.ஜெயராமன், விசிக மாவட்டச் செயலாளர் த.கு.பாண்டியன், அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் சுபேதார், சிபிஐ மாவட்ட நிர்வாகி  ஜெ.பிரதாபன், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் கே.மணி, ஏஐசிசிடியு மாவட்டச் செயலாளர் சி. முருகன், மதிமுக மாவட்ட நிர்வாகி ஜெயபிர காஷ், சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.ஜீவா,  புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் இ.பி.புகழேந்தி, சிபிஎம் நகரச் செயலா ளர் ஆர்.ஜோதிபாசு, ஒன்றியச் செயலாளர் என். கந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங் கத்தின் சார்பில் தருமபுரி ஆட்சியர் அலுவல கம் முன்பு வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட் டது. இதில் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் கோ.பழனியம்மாள், மாவட்டத் தலைவர் எம்.சுருளிநாதன், செயலாளர் ஏ.சேகர், ஜாக்டோ –  ஜியோ நிதி காப்பாளர் கே.புகழேந்தி, சத்து ணவு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் பெ. மகேஸ்வரி உட்பட திரளானோர் கலந்து கொண் டனர்.

அரூர் ரவுண்டானா அருகே அனைத்துக்கட்சி சார்பில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்திற்கு, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் பி.குமார் தலைமை வகித்தார். இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்து, திமுக செயலாளர் முல்லை ரவி, காங்கிரஸ் தலைவர் கணேசன், விசிக தரும புரி கிழக்கு மாவட்டச் செயலாளர் சாக்கன்சர்மா,  சிபிஐ துணைச்செயலாளர் கா.சி.தமிழ் குமரன், மனிதநேய மக்கள் கட்சி பொறுப்பாளர் நியாஸ்,  மாதர் சங்க செயலாளர் தனலட்சுமி, தமுஎகச மாநிலக்குழு உறுப்பினர் நவகவி, கலை இலக் கிய பெருமன்ற தலைவர் ரவீந்திர பாரதி, தொமுச மாநில துணைத்தலைவர் ஜே.பழனி, கரும்பு வெட்டும் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் இ.கே.முருகன் உட்பட பலர் கலந்து கொண்ட னர். பென்னாகரம் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இரங்கல் கூட்டத்திற்கு சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி. மாதன் தலைமை வகித்தார். இதில் திமுக ஒன்றிய செயலாளர் மடம் முருகேசன், பென்னாகரம் பேரூராட்சி மன்ற தலைவர் வீரமணி, திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் தீர்த்தகிரி, விசிக மாவட்டச் செயலாளர் கருப்பண்ணன், திராவிடர் விடுதலைக் கழக மாவட்டச் செயலாளர் சந் தோஷ் குமார், சிபிஎம் செயலாளர்கள் ரவி, ஜி. சக்திவேல் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண் டனர். பாலக்கோடு பேருந்து நிலையம் அருகே  சிபிஎம் வட்டச் செயலாளர் டி.எஸ்.ராமச்சந்திரன் தலைமையில் தோழர் சங்கரய்யா இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற் குழு உறுப்பினர் சி.நாகராசன், விவசாயிகள் சங்க செயலாளர் ஜி.நக்கீரன், காங்கிரஸ் தலை வர் கணேசன், விசிக செயலாளர் ராஜகோபால், ஆர்எஸ்பி நிர்வாகி சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையம் அருகே சிபிஎம் வட்டச் செயலாளர் தனுஷன்  தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.  இதில் பேரூராட்சி தலைவர் மாரி, சிபிஎம் மாவட்ட  செயற்குழு உறுப்பினர் சோலை.அருச்சுணன், காங்கிரஸ் மாநில செயல் தலைவர் பூபதி, திமுக நகரச் செயலாளர் ஜெயச்சந்திரன், ஒன்றிய செய லாளர் முத்துக்குமரன், விசிக மண்டல செயலா ளர் தமிழ் அன்வர், மாநிலத் துணைத்தலைவர் அதியமான், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்டச்  செயலாளர் அரசு, திராவிடர் கழக மாவட்டத் தலைவர் தங்கராஜ், இலக்கிய அணி மாநிலச் செயலாளர் மாரி கருணாநிதி, ஆம் ஆத்மி கட்சி  மாவட்ட இணைச்செயலாளர் ஜெபசிங், சிபிஐ ஒன்றியச் செயலாளர் சுப்பிரமணி, சிபிஎம் மாவட் டக்குழு உறுப்பினர் வஞ்சி, மூத்த தலைவர் தீர்த்த கிரி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில்,  சி.சொக்கலிங்கம் நன்றி கூறினார்.

சேலம்
சேலம் மாவட்டம், ஆத்தூரில் மறைந்த  தோழர் என்.சங்கரய்யாவிற்கான நினைவேந் தல் கூட்டம் நடைபெற்றது. ஆத்தூர் காந்தி சிலை யிலிருந்து, பழைய பேருந்து நிலையம் வரை நினைவேந்தல் ஊர்வலம் நடைபெற்றது. பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் ஏ. முருகே சன் தலைமை வகித்தார். இதில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ராமமூர்த்தி,  நகர்மன்ற தலைவர் நிர்மலா, திமுக நகர செய லாளர் கே பாலசுப்பிரமணியம், காங்கிரஸ் கட்சி யின் கிழக்கு மாவட்ட தலைவர் ஓ.சூ.மணி,  மதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் வை. கோபால்ராஜ், திராவிடர் கழகத்தின் கிழக்கு மாவட்டத் தலைவர் வானவில்,  சிபிஐ மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் என்.எம்.சடையன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.