திருப்பூர், ஆக. 16 – இந்தியத் திருநாட்டின் 76ஆம் ஆண்டு சுதந் திர தினம் செவ்வாயன்று திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சியினர் சுதந்திர தினக் கொண் டாட்டத்தின் ஒரு பகுதியாக வெறுப்பு அரசியலை முறியடித்து மக்கள் ஒற்றுமை பாதுகாக்கவும், 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக அரசை தோற்க டிக்கவும் உறுதியேற்றனர். திருப்பூர் அவிநாசி சாலையில் உள்ள மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலக மான தியாகி பழனிசாமி நிலையம் முன்பாக சுதந்திர தின கொடியேற்று விழா நடைபெற்றது. கட்சியின் வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆர். காளியப்பன் தலைமையில் தேசியக்கொடியை கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காம ராஜ் ஏற்றி வைத்தார். செங்கொடியை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.உண்ணி கிருஷ்ணன் ஏற்றி வைத்தார். இதைத்தொடர்ந்து மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜி.சாவித்திரி சுதந்திர தின உறுதிமொழியை வாசிக்க, இந்திய சுதந் திரத்தை பாதுகாக்க அனைவரும் உறுதி ஏற்ற னர். முன்னதாக கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ச.நந்தகோபால் வரவேற்றார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எம்.ராஜகோ பால், கே.உண்ணிகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலா ளர் செ.முத்துக்கண்ணன் ஆகியோர் சுதந்திர தின உரையாற்றினர். இந்த நிகழ்வில் பெருந்தி ரளானோர் கலந்து கொண்டனர்.
அரிசிக்கடை வீதி
மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் தெற்கு மாநக ரம், தெற்கு ஒன்றியக் குழுக்கள் சார்பில் செவ்வா யன்று அரிசிக்கடை வீதியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு கட்சியின் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.மூர்த்தி தலைமை வகித்தார். தெற்கு மாநகரச் செயலா ளர் டி.ஜெயபால் வரவேற்றார். கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.ராஜகோ பால் தேசியக்கொடியை ஏற்றி வைத்து உரை யாற்றினார். கட்சியின் செங்கொடியை மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் ஏற்றி வைத்து உரையாற்றினார். மாவட்டக்குழு உறுப்பினர் பா.லட்சுமி தேச ஒற்றுமையைப் பாதுகாப்போம் என்று சுதந்திர தின உறுதிமொழியை வாசிக்க, அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.உண்ணிகிருஷ் ணன், மாமன்ற உறுப்பினர் ஆர்.மணிமேகலை உள்பட மாவட்டக்குழு, மாநகர, ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கட்சி அணியினர் கலந்து கொண்டனர். நிறைவாக சேகுவேரா, ஜிகினா சிலம்பாட்டக் குழுக்களைச் சேர்ந்த சிறார்களின் சிலம்பாட்டம், கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் திரளானோர் கலந்து கொண் டனர்.
சுதந்திர தின ஓவியப் போட்டி
15 வேலம்பாளையத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், ஜனநாயக மாதர் சங்கம், இந் திய மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து 21ஆவது ஆண்டாக, பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சுதந்திர தின ஓவியப் போட் டியை நடத்தினர். முன்னதாக சிஐடியு மூத்த தலை வர் வி.பி.சுப்பிரமணியம் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். ஓவியப் போட்டியில் அப்பகுதி மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றோ ருக்கு மாலையில் பரிசளிப்பு விழா நடைபெற் றது. முதல் மண்டலத் தலைவர் உமாமகேஸ் வரி, மார்க்சிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் ச.நந்த கோபால் உள்ளிட்டோர் பரிசளித்துப் பாராட்டி னர்.
வெள்ளகோவில்
வெள்ளகோவிலில் நடேசன்நகர் 7ஆவது வார்டில் சுதந்திர தின கொடி ஏற்றப்பட்டது. இதில் 7ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர், மார்க் சிஸ்ட் கட்சியின் ராதாமணி பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். மார்க்சிஸ்ட் கட்சியி னர், அப்பகுதியைச் சேர்ந்தோர் திரளானோர் கலந்து கொண்டனர்.
மிஷின் வீதி
திருப்பூர் தெற்கு மாநகரம் மிஷின் வீதியில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நடத்தப்பட்ட சுதந்திர தின விழாவில் கட்சியின் தெற்கு மாநகரச் செய லாளர் டி.ஜெயபால் பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரையாற் றினார். தெற்கு மாநகரக்குழு உறுப்பினர் செந் தில்குமார் உள்பட திரளானோர் கலந்து கொண்ட னர்.
பெருமாநல்லூர்
மார்க்சிஸ்ட் கட்சியின் பெருமாநல்லூர் பகுதிக் கிளைகள் சார்பில் சுதந்திர தினக் கொடி யேற்று விழா திருப்பூர் சாலை பெருமாநல்லூர் கட்சி அலுவலகம் முன்பாக நடைபெற்றது. பெரு மாநல்லூர் ஏ கிளைச் செயலாளர் ஜி.சண்முகம் தலைமையில், ஈட்டிவீரம்பாளையம் கிளைச் செயலாளர் கே.சுப்பிரமணியம் வரவேற்றார். கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே. ரங்கராஜ் தேசியக்கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரையாற்றினார். செங்கொடியை காளிபாளையம் கிளைச் செயலாளர் கே.பட்டு சாமி ஏற்றி வைத்தார். சுதந்திர தின உறுதிமொ ழியை ஒன்றியக்குழு உறுப்பினர் பி.கே.கருப்ப சாமி வாசிக்க, அனைவரும் உறுதி ஏற்றனர். இந்த நிகழ்வில் எம்.கே.கோவிந்தசாமி, ஆர்.புண்ணி யமூர்த்தி, ஜெ.செல்வநாதன், வி.கே.சாமிநாதன் உள்ளிட்ட கிளைச் செயலாளர்கள் மற்றும் கட்சி அணியினர் கலந்து கொண்டனர். விழா முடிவில் பெருமாநல்லூர் ஏ கிளை உறுப்பினர் கே.ரங்க சாமி நன்றி கூறினார்.
சே.குருவாயூரப்பன் நகர்
திருப்பூர் வடக்கு ஒன்றியம் சே.குருவாயூ ரப்பன் நகர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை சார்பில் சுதந்திர தின விழா கொடியேற்ற நிகழ்ச்சி செவ்வாயன்று நடைபெற்றது. கிளை உறுப்பி னர் ஆர்.செந்தில் தலைமையில் நடைபெற்ற விழாவில் தேசியக் கொடியை கிளைச் செயலா ளர் ஆர்.சந்திரன் ஏற்றி வைத்தார். கட்சியின் செங்கொடியை கிளை உறுப்பினர் எஸ்.பெரு மாள் ஏற்றினார். ஜி.பழனிச்சாமி உறுதிமொ ழியை வாசிக்க நிகழ்வில் பங்கேற்றோர் மக்கள் ஒற்றுமை பாதுகாக்க உறுதியேற்றனர். கட்டுமா னத் தொழிலாளர்கள், சிறுவர், சிறுமியர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் பி. பூபதி நன்றி கூறினார்.