அவிநாசி, ஜூன் 22- அவிநாசி அருகே ஆட்டையாம்பாளையம் போக்குவ ரத்து சிக்னல் செயலிகளை துவக்கும் பணியில் ஈடுபட்டு வரு கின்றனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம், வேலாயுதம் பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கோவை செல்லும் பிரதான சாலையில் போக்குவரத்து சிக்னல் செயலி அமைந்துள் ளது. இந்நிலையில் போக்குவரத்து சிக்னல் செயலி நீண்ட நாட்களாக செயல்படாமல் இருந்து வந்தது. இதுதொ டர்பாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் திருவிழா போன்ற நாட்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது எனவே போக்குவரத்து சிக்னலை சரி செய்ய கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து புதனன்று போக்குவரத்து செயலி இயக்க பணிகள் நடைபெற தொடங்கியுள்ளது.