திருப்பூர், டிச.6- திருப்பூர் வள்ளுவர் நகர் பகுதியில் திங்களன்று திருப்பூர் ஊராட்சி ஒன்றிய நிதியில் ஓரடுக்கு தார் சாலை அமைக்க பணிகள் துவங்க விழா நடைபெற்றது திருப்பூர் ஒன்றியம், இடுவாய் ஊராட்சி பாரதிபுரம் பகுதி யில் உள்ள வள்ளுவர் நகரில் திங்களன்று திருப்பூர் ஊராட்சி ஒன்றிய நிதியில் ஓரடுக்கு தார் சாலை அமைக்க பணிகள் துவங்க விழா நடைபெற்றது. இடுவாய் ஊராட்சித் தலைவர் கே.கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பிரபு என்கிற பாலசுப்பிர மணியம், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எஸ்.பரம சிவம், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் எம்.கணேசன், ஏழா வது வார்டு ஊராட்சி மன்ற உறுப்பினர் மணி, ஊராட்சி செயலர் நாகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, முதலிபாளையம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரும், திமுக திருப்பூர் ஒன்றிய செயலாளருமான விசுவலிங்கசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நிகழ்ச்சியில் அனைத்து கட்சி ஊழியர்களும், பொது மக்களும் பங்கேற்றனர்.