districts

img

தருவைகுளம் கடற்கரையில் சுற்றுலா : மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

தூத்துக்குடி, ஜன. 8  தூத்துக்குடி தருவைகுளம் கடற்கரை பகுதியில் சுற்றுலா சூழலை உருவாக்கும் விதமாக அப்பகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடை பெற்றது. தூத்துக்குடி தருவைகுளம் கடற் கரை பகுதியில், மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளை சார்பாக சுற்றுலா சூழல் உருவாக்கப்பட உள்ளது. பவள பாறைகளை கண்ணாடி இழை படகிலும், ஸ்கூபா டைவிங் மூலமாகவும் படகில் சென்று பார்ப்பதற்கும் அறக்கட்டளை சார்பாக பணிகள் மேற்கொள்ளபட்டுள்ளது. இது தொடர்பாக வன உயிரின காப்பாளர் குரு சாமி அறிவுறுத்தலின்படி வனச்சரக அலு வலர் ரகுவரன் தலைமையில் ஆலோச னைக் கூட்டம் நடைபெற்றது. பின்னர்  கடற்கரை பகுதியில் சவுக்கு, பூவரசு, பாதாம், சரக்கொன்றை, புங்கம் போன்ற வகையான 200 மரக்கன்றுகள் நடப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் தருவை குளம் பஞ்சாயத்து துணை தலைவர், திட்ட கிராம தலைவர், நாட்டு படகு மீனவ சங்க தலைவர், விசைபடகு மீனவ சங்க  தலைவர் மற்றும் திட்ட கிராம உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி யை வனவர் அருண்குமார், ராஜ்குமார்,  மதனகுமார் தலைமையில் வனகாப்பா ளர்கள் பாலாஜி, மணிகண்டன், சிவ ராமன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர் கள் ஏற்பாடு செய்திருந்தனர்.