districts

img

ஊசிமலை - கக்கநல்லா சாலை சீரமைப்பு பணிகள் துவக்கம்

உதகை, மார்ச் 21- கூடலூர் அருகே உள்ள ஊசிமலை - கக்கநல்லா தேசிய நெடுஞ்சாலையில், ரூ.8.5 கோடி மதிப்பீட்டில் சீரமைப்பு பணி துவங்கியுள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூர் ஊசிமலை முதல் கக்கநல்லா வரையிலான 18 கி.மீ. தேசிய நெடுஞ்சாலை மிக மோசமான நிலையில் பழுதடைந்து காணப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில், இந்த சாலையை சீரமைக்க தேசிய நெடுஞ்சாலை துறை  சார்பில் ரூ.8.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கு, வனத் துறை முதலில் அனுமதி மறுத்ததுடன், முறையான அனு மதி பெற்று பணிகளை தொடங்க அறிவுறுத்தியது. இதை யடுத்து தற்போது இந்த சாலை சீரமைப்பு பணிகள் தொடங் கப்பட்டுள்ளது. முதுமலை தெப்பக்காடு முதல் கக்கநல்லா சோதனைச்சாவடி வரையில் தற்போது சாலை சீரமைப் புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், இந்த சாலை 7 ஆண்டுகளுக்கு பின்னர் சீரமைக்கப்படுகிறது என நெடுஞ் சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.