திருப்பூர், டிச.15- விடுதலைப் போராட்ட வீரர், கம் யூனிச இயக்கத்தின் முதுபெரும் தலைவர் பி.ராமமூர்த்தி மற்றும் வேலம்பாளையம் முன்னாள் நகரச் செயலாளர் வி.பி.சுப்பிரமணியம் ஆகியோரது நினைவு தினம் ஞாயி றன்று அனுசரிக்கப்பட்டது. விடுதலைப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்க கால அரசியல் தலைமைக் குழு உறுப்பினருமான பி.ராமமூர்த்தி யின் 37 ஆம் ஆண்டு நினைவு தினம், கட்சியின் திருப்பூர் மாவட்டம், வேலம் பாளையம் முன்னாள் நகரச் செய லாளர் வி.பி.சுப்பிரமணியத்தின் முத லாம் ஆண்டு நினைவு தினம் ஞாயி றன்று அனுசரிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம், வேலம்பாளையம் மற் றும் அனுப்பர்பாளையம் கிளைக ளில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில், தோழர்களின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி செவ்வணக்கம் செலுத்தப் பட்டது. இதில் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. ரங்கராஜ், நகரச் செயலாளர் ச.நந்த கோபால், மாவட்டக்குழு உறுப்பினர் ர.கவிதா, நகரக்குழு உறுப்பினர்கள் மற்றும் வி.பி.சுப்பிரமணியம் குடும் பத்தினர் கலந்து கொண்டனர். இதேபோன்று, கட்சியின் ஊத் துக்குளி தாலுகா, பி.ராமமூர்த்தி நகர் கிளையின் சார்பில் தோழர் பி.ராம மூர்த்தியின் நினைவு தினம் அனுச ரிக்கப்பட்டது. கிளைச் செயலாளர் லோகநாதன் தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்ச்சியில், கட்சியின் முன்னாள் தாலுகாச் செயலாளர் சிவ சாமி, தாலுகாக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.