கோவை, அக்.1- அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தோழர் பி.சீனிவாச ராவ் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. விவசாயிகளின் உரிமைகளுக்காக போராடிய தோழர் பி. சீனிவாசராவின் 62 ஆவது நினைவு தினம் சனியன்று விவசாய சங்கங்களால் அனுசரிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட எஸ்.குமாரபாளையம் பகுதியில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பி.சீனிவாச ராவ் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரி யாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வு, அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. விவசாய சங்க மாநிலத் துணைத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன், மாவட்டச் செயலாளர் வி.ஆர்.பழனி சாமி, விவசாய தொழிலாளர் சங்கத்தின் சுல்தான்பேட்டை ஒன்றியத் தலைவர் எம்.ஆனந்தன், ஒன்றியப் பொருளாளர் எம்.செல்வராஜ், தென்னை விவசாயிகள் சங்கத்தின் மாவட் டக்குழு உறுப்பினர் ம.சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.