திருப்பூர், மார்ச் 19- திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் செயலாளரும், தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் முன் னாள் தலைவரும், பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய முன்னாள் கவுன்சில ருமான எஸ்.கந்தவேல் மறைவு நாளை முன்னிட்டு சனியன்று அவரது உருவப் படத்துக்கு மலர் தூவி நினைவேந்தல் செய்யப்பட்டது. வேளாண்மைத் துறையில் பணி யாற்றிய அரசு ஊழியரான கந்தவேல், பணி ஓய்வுக்குப் பின் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விவசாய இயக்கத்தின் வளர்ச்சிக்கு பொங்கலூர் ஒன்றியத் தில் ஓய்வறியாமல் பாடுபட்டார். அவ ரது இரண்டாம் ஆண்டு நினைவேந் தல் நிகழ்ச்சி சனியன்று மார்க்சிஸ்ட் கட் சியின் பொங்கலூர் ஒன்றிய அலுவல கம் முன்பு கடைப்பிடிக்கப்பட்டது. இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில், கிராமப்புற விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் கோரிக்கைகளை முன்வைத்து அணிதிரட்டி வலுமிக்க இயக்கத்தை கட்டியமைக்க எஸ்.கந்த வேல் பெயரால் உறுதி ஏற்கப்பட்டது.இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் ஜி.சம்பத், பொங்கலூர் மார்க்சிஸ்ட் கட்சி முன் னாள் ஒன்றியச் செயலாளர் சிவசாமி உள்பட திரளானோர் கலந்து கொண்ட னர்.