திருப்பூர், டிச.15- இந்திய கம்யூனிச இயக்கத்தின் முன்னோடி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நவரத்தினங்களில் ஒருவரான தோழர் பி.ராமமூர்த்தி யின் நினைவு நாளையொட்டி வெள் ளியன்று திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
திருப்பூர்:
தோழர் பி.ராமமூர்த்தியின் நினைவு தினத்தையொட்டி திருப்பூர் மாவட்டக் குழு அலுவலகம் முன்பு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் தலைமை யில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கட்சியின் மாவட்டச் செயலாளர் செ. முத்துகண்ணன், தெற்கு ஒன்றிய செயலாளர் சி.மூர்த்தி, தெற்கு மாநக ரச் செயலாளர் டி.ஜெயபால், வடக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.காளியப் பன் உட்பட கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட னர்.
ஊத்துக்குளி:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஆர்.எஸ். கிளை செயலாளர் கே. ஏ.சிவசாமி தலைமையில் ஊத்துக் குளி ஆர்.எஸ். தாலுக்கா குழு அலுவ லகம் முன்பு தோழர் பி.ராமமூர்த் திக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில், தாலுக்கா செயலாளர் எஸ்.கே.கொளந்தசாமி நினைவுரை ஆற்றினார். வாலிபர் சங்க தாலுக்கா செயலாளர் பாலமுரளி, கட்சி கிளைச் செயலாளர்கள் குன்னம்பாளையம் மாரிமுத்து, நீலாக்கவுண்டன்பாளை யம் பாபு, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதேபோல பல்லகவுண்டன்பா ளையம் சிஐடியு சங்க அலுவலகத் தில் தோழர் பி.ராமமூர்த்தி அவர்க ளின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட் டது. இதில் பல்லகவுண்டன்பாளை யம் மற்றும் பவுண்டரி கிளை நிர் வாகிகள் பங்கேற்றனர்.
அவிநாசி
அதேபோல அவிநாசிலிங்கம்பா ளையம், அவிநாசி வடக்கு கிளை, திருமுருகன்பூண்டி, அம்மாபாளை யம், வடுகபாளையம் உள்ளிட்ட பகு திகளில் நினைவு தினம் அனுசரிக்கப் பட்டது. இதில் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர், நகர்மன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் அம்மாபாளையம் பகுதியில் கொடி ஏற்றப்பட்டுள்ளது.