districts

img

தோழர் அனந்த நம்பியார் நினைவேந்தல்

நாமக்கல், அக்.12- ரயில்வே தொழிலாளி வர்க்க போராட்டங் களில் தனி முத்திரை பதித்தவர் தோழர் அனந்த நம்பியார் நினைவு தினம் பள்ளிபா ளையத்தில் அனுசரிக்கப்பட்டது. 1939 ஆம் ஆண்டு முதல் அரை நூற் றாண்டு காலம் பிரிட்டிஷ் இந்தியாவிலும் சுதந்திர இந்தியாவிலும் ரயில்வே தொழி லாளி வர்க்க போராட்டங்களில் தனி முத்திரை பதித்தவர் தோழர் அனந்த நம்பியார். ரயில்வே தொழிலாளர்களுக்கும், பல்வேறு மக்கள் பிரச்சனை சார்ந்த பிரச்சினைக ளுக்கும் ஓயாது போராடியவர்.  ரயில்வே தொழிலாளர்களின் உரிமைக் காய் வாழ் நாள் முழுவதும் போராடிய அன்புத் தோழனின் நினைவு தினம்  நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவேரி ஆர் எஸ் பகுதியில் அனுசரிக்கப்பட்டது.  இதில், விசைத்தறி தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். சிஐடியு  சங்க மாவட்டத் தலைவர் எம்.அசோகன் மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைக ளுக்கான மாவட்டப் பொறுப்பாளர் எம்.ஆர். முருகேசன், விசைத்தறி சங்கர் நிர்வாகிகள் அசன் உள்ளிட்டோர் தோழர் அனந்த நம்பி யாரின்  திருவுருவப் படத்திற்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர்.