districts

img

சேலம் - விருதாச்சலம் இடையே விரைவில் பயணிகள் ரயில் சேவை

சேலம், டிச.29- சேலம் - விருதாச்சலம் இடையே மின் மயமாக்கப்பட்ட ரயில் பாதையில் சோதனை ஒட்டம் வெற்றிகரமாக மேற் கொள்ளப்பட்ட நிலையில், விரைவில் பய ணிகள் ரயில் இயக்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் கௌதம் ஸ்ரீனிவாஸ் தெரி வித்துள்ளார். சேலம் விருதாச்சலம் இடையிலான 136  கிலோ மீட்டர் தொலைவு கேஜல் ரயில் பாதையை 2007ம் ஆண்டு அகல ரயில்பாதை யாக மாற்றப்பட்டது. இந்நிலையில், அகல ரயில்பாதையை மின்மயமாக்கும் பணி 2020 ஆம் ஆண்டு 200 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் செவ்வா யன்று இந்த பாதையில் தெற்கு வட்ட ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் ராய் ஆய்வு மேற்கொண்டார்.

 இதனை தொடர்ந்து புதனன்று இந்த ரயில்பாதையில் சிறப்பு ரயில் இயக்கப்பட்டு தண்டவாளத்தின் உறுதித்தன்மை மற்றும் மின்பாதையில் உள்ள தடைகளை கண்ட றியும் பணி நடைபெற்றது. நண்பகல் 12.05 மணியளவில் விருதாச்சலத்தில் இருந்து புறப்பட்ட இந்த ரயில், சின்னசேலம், ஆத் தூர், ஏத்தாப்பூர், வாழப்பாடி, முத்தம்பட்டி, அயோத்தியாபட்டணம், டவுன் ரயில் நிலை யம் வழியாக சேலம் ஜங்சன் ரயில் நிலை யத்திற்கு மதியம் 2.10 மணியளவில் வந்த டைந்தது. இந்த ரயிலில் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் கௌதம் ஸ்ரீனிவாஸ், தெற்கு வட்ட ரயில்வே பாதுகாப்பு ஆணை யர் அபய்குமார் ராய், மின்பொறியாளர் மேத்தா ஆகியோர் பயணம் செய்தனர்.  இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் கௌதம் ஸ்ரீனிவாஸ் செய் தியாளர்களிடம் கூறுகையில், புதிய மின்  பாதையில் பயணிகள் ரயில் சேவை தொடங் குவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளி யாகும். இதன்மூலம் ஏற்கனவே இருந்த பயண நேரத்தில் அரை மணி நேரம் குறை யும். தற்போது,சேலம் கோட்டத்தில் உள்ள  அனைத்து வழித்தடங்களும் முழுமையாக மின்மயமாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.