யானை உயிரிழப்பு கோவை,
பிப்.11- வால்பாறை மானாம்பள்ளி வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் 7 வயது பெண் யானை உயிரிழந்தது. கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பக மாணம்பள்ளி வனச்சரகத்திற்குட்பட்ட பிபிடீசி லிமிடெட் தோணிமுடி எஸ்டேட் பகுதியில் 7 வயது பெண் யானை ஒன்று உயிரிழந்துள்ளதை செவ்வாயன்று களப்பணி யாளர்கள் தணிக்கையின் போது பார்த்தனர். இதனையடுத்து, உதவி பாதுகாவலர் பிரியதர்ஷினி தலைமையில், சம்பவ இடத்திற்கு சென்று, உயிரிழந்த காட்டு யானையின் உடலை உடற்கூறு பரி சோதனை செய்தனர். வால்பாறை பகுதியில் யானைக ளின் உயிரிழப்பு அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. கடந்த வாரம் முருகாளி எஸ்டேட் பகுதியில் காட்டு யானை உயி ரிழந்தது குறிப்பிடத்தக்கது.
கொலம்பியாவின் தைரியமும் - மோடியின் இயலாமையும்
பொள்ளாச்சி, பிப். 11- தனது நாட்டு பிரஜைகளை அமெரிக்கா, அடிமைகளைப் போல விலங்கிட்டு அழைத்து வரு வதைக் கண்டு பொங்கி எழுந்த கொலம்பிய நாட்டு ஜனாதிபதியும், என்ன நடந்தாலும் கண் கட்டி, வாய் பொத்தி, காதை மூடிக் கொண்டு கருமமே என இருக்கும் மோடியின் அரசையும் இந்த பொதுச்சமூகம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறது என கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு விமர்சித் தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அகில இந்திய மாநாடு ஏப்ரல் 2 முதல் 6 வரை மதுரையில் நடை பெற உள்ளது. இம்மாநாட்டை மக்க ளிடம் கொண்டு செல்லும் வகை யில், மார்க்சிஸ்ட் கட்சியின் கிளை கள் துவங்கி அனைத்து தரப்பின ரும் பல்வேறு வடிவங்களில் பிரச்சா ரத்தை மேற்கொண்டு வருகின்ற னர். இதன்ஒருபகுதியாக, பொள் ளாச்சி தாலுகா குழுவின் சார்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற் றது. இதில், பங்கேற்று கல்வியா ளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு பேசுகை யில், திருவள்ளுவர். ஒரு சமத்துவ மான பொதுவுடைமை சமூகத்திற்கு வித்திட்டவர். கற்க வள்ளுவன் கூறி யபடி கற்க கசடற கற்பவை கற்ற பின் நிற்க அதற்கு தக. முதலில் கற்க வேண்டும், அனைத்தையும் கற்றபின் தான் எது கசடு என்று தெரி யவரும், அதை நீக்கி விட்டு கற்றதில் எது நல்லதோ அதன்படி நிற்க வேண்டும் என கற் றல் முறையினை நமக்கு அடையா ளம் காட்டியவர் வள்ளுவர் என் கிறார் பாரதிதாசன். சாதி என்னும் தாழ்ந்தபடி நமக் கெல்லாம் தள்ளுபடி சேதி அப்படி தெரிந்துபடி என்று. உலகத்தின் பலவீனமான பிரத மர் நரேந்திரமோடி. ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த பொது பல நூறு இந்தியர்கள் ரத் தத்தை குடித்தது பிரிட்டிஷ் ராணு வம். அப்போது, குழந்தையாக இருந்த சிறுவனும், அவரது சகோத ரியும் தன் வீட்டி லிருந்து ஜாலி யன் வாலாபாக் சென்று அங்கு உள்ள மண்ணை எடுத்து வந்தனர். அதனை ஒரு குடுவையில் வைத்து தினந்தோறும் அந்த மண்ணின் மீது சத்தியம் செய்து வந்தனர். இந்திய மக்களுக்கு நல்வாழ்வு தரும் சம தர்ம அரசை நிறுவ சபதம் ஏற்றனர். அந்த சிறுவன் தான் மாவீரன் பகத் சிங் பத்தாண்டு கால தமது போராட் டத்தின் மூலம் பிரிட்டிஷ் ஆட்சியை நடுங்க செய்தவர். அப்படிப்பட்ட பகத்சிங் பிறந்த மாநிலத்திற்கு அமெரிக்காவை சேர்ந்த ராணுவ விமானம் மூலம் அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியதாக புலம்பெயர் கூலி இந்தியர்களை கை, கால் விலங்கிட்டு அழைத்து வந்தனர். மோடி எதுவும் வாய் திறக்கவில்லை, அவரை பகத்சிங் கின் ஆன்மா மன்னிக்காது. சின்ன சிறிய நாடான கொலம் பியா அமெரிக்க நாட்டிற்கு சட்ட விரோதமாக குடியேறியவர்களை, ராணுவ விமானத்தில் ஏற்றி கொலம்பியாவிற்கு அழைத்து சென்றபோது, அந்த அமெரிக்க ராணுவ விமானத்தை தரையிறங்க கொலம்பியா நாடு அனுமதிக்க வில்லை. திரும்பிச் சென்ற அமெ ரிக்கா ராணுவத்தில் இருந்த கொலம்பியா நாட்டைச் சேர்ந்த அவர்களை மீட்க கொலம்பியா தனி யாக விமானத்தை அனுப்பி அவர் களை மரியாதையாக அழைத்து வந்னர். ஆனால், 140 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு பெரும் நாட்டின் பிரதமர், 56 இன்ச் மார்பு கொண்ட நரேந்திர மோடிக்கு ட்ரம்பை கண்டிக்க தைரியம் இல்லை இந்திய மக்களின் தன் மானத்துடன் அமெரிக்கா விளை யாடி இருக்கிறது. யுஜிசி வரைவு அறிக்கை மூலம் மாநிலங்களின் உரிமைகளை தட் டிப் பறிக்க முயற்சி செய்கிறார்கள் ஒன்றிய அரசின் பட்டியல் 40 இல் பல்கலைக்கழகம் உருவாக்கும் உரிமை மாநில அரசுக்கு இல்லை என மாற்றம் செய்ய உள்ளார்கள். மாநில அரசுகளை நகராட்சிக்கு என்ன அதிகாரம் உள்ளதோ அந்த அளவுக்கு மட்டும் மாநில அரசின் அதிகாரத்தை குறைக்க மோடி அரசு துடிக்கிறது. நவம்பர் 25 ஆம் தேதியன்று இந்திய அரசமைப்பை உருவாக்கினார்கள். ஆனால் ஜன வரி 6 யுஜிசி வரவு அறிக்கையின் மூலம் அரசு அமைப்பு கூறும் கூட் டாட்சி தத்துவத்தை சிதைக்க முயல்கிறார்கள். யுஜிசி வரைவு அறிக்கையில் ஆபத்துக்கள் அதி கம இருப்பதை உணர வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள பல் கலைக்கழகங்கள் தமிழ்நாடு அர சால் உருவாக்கப்பட்டது. ஆனால் யுஜிசி வரைவறிக்கை என்ன கூறு கிறது என்றால் இனி பல்கலைக் கழகங்களை மாநில அரசுகள் உரு வாக்க முடியாது எனக் கூறுகிறது. மாநில அரசால் உருவாக்கப்பட்ட பல்கலை கழகத்தில் துணை வேந்தர்களை நியமிக்கும் அதி காரம் மாநில அரசுக்கு மறுக்கப் படுகிறது. ஆனால் ஒன்றிய அரசின் கீழ் உள்ள பல்கலைகளுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் பிரதமருக்கு உண்டு. தனியார் பல்கலைக்கழகங் களுக்கு துணை வேந்தர்கள் நிய மிக்கும் அதிகாரம் பல்கலைக் கழகத்தின் உரிமையாளருக்கு உள் ளது போல் தமிழக அரசால் உரு வாக்கப்பட்ட பல்கலைக்கழகங்க ளுக்கு துணைவேந்தர்கள் நிய மிக்கும் அதிகாரம் இருக்க வேண் டாமா? யுஜிசி வரைவுப்படி பல்கலைக் கழகம் நடந்தால் மாநில அரசின் கீழ் செயல்படும் கல்லூரிகள் மூடப்ப டும். புதிய கல்விக் கொள்கை மூலம் 75 சதவீதம் மார்க் வாங்கினால் தான் அடுத்த வருட மேற்படிப்புக்கு செல்ல முடியும் என்பது மூலம் கல்வியில் இருந்து மாணவர்களை வெளியேற்ற சூழ்ச்சிகள் நடை பெறுகிறது. இப்படிப்பட்ட தேசிய கல் விக் கொள்கை கூட்டாட்சி தத்து வத்தை குழிதோண்டு புதைக்க கூடி யது. தேசிய கல்விக் கொள்கை நடாளுமன்றத்தில் நிறைவேறி னால் பெரும் ஆபத்து இந்த சட் டம் நிறைவேறினால் தமிழ்நாடு மாநிலமாக இருக்காது யூனியன் பிரதேசமாக மாறிவிடும். யுஜிசி விதிகள் யானை வரும் முன் வரும் ஓசைதான் தயாரா கிக்கக் கொண்டு இருக்கிறது. தேசிய உயர்கல்வி ஆணைய மசோதா யுஜிசி வரைவு கடைசி ஆணி என்றால் அதை ஓங்கி அடிக்க தயாராகும் சுத்திதான் தற்போது உருவாகிக் கொண்டிருக்கும் வரைவு மசோதா (Draft HECI Bill). கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப் படையில் அமைந்த மக்கள் ஜனநா யகக் குடியரசின் இந்திய அர சமைப்புச் சட்டம் சிதைக்கப்படும் பெரும் அபாயம். மக்களிடம் உரை யாடல் நிகழ்த்தாமல் பேராபத்தைத் தடுக்க இயலாது என்றார்.