கோவை, ஜன.31- விவசாயத்தை மேம்ப டுத்துவது குறித்த தங்க ளின் ஆய்வுகளை விவசா யிகளிடம் விழிப்புணர்வு ஏற்ப டுத்தும் நிகழ்வில் கோவை வேளாண் கல்லூரி மாணவர் கள் பங்கேற்றனர். கோவை அரசம்பாளை யத்தில் உள்ள அமிர்தா வேளாண்மை கல்லூரியில் பயிலும் நான் காம் ஆண்டு மாணவர்கள், ஊரக வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு தென்னை மக சூலை அதிகப்படுத்துவதை பற்றியும் பூச்சிகளின் மேலாண்மை பற்றியும் விழிப் புணர்வு கூட்டம் நடத்தினர். இதில் சொக் கனூர் மற்றும் பொட்டையாண்டிபுரம்பு கிராமத்தைச் சேர்ந்த பல தென்னை விவ சாயிகள் கலந்து கொண்டனர். தென்னை டானிக் பயன்பாடு குறித்தும் அதன் நன் மைகள் குறித்தும் விவசாயிகளுக்கு வேளாண் மாணவர்கள் எடுத்துரைத்தனர். சுற்றுச்சூழல் மற்றும் மண்வள பாது காப்பை கருத்தில் கொண்டு, மாணவர்கள் தென்னை பூச்சிகளை இயற்கை முறையில் கட்டுப்படுத்துவது, பின்பு தேனி வளர்ப்பின் பலதரப்பட்ட நன்மைகள் பற்றியும் விவசா யிகளுக்கு எடுத்துரைத்தனர்.