விஏஓ தற்காலிக பணிநீக்கம்
ஈரோடு, ஜுலை 24- ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், எக்கட்டாம் பாளையம் பி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த வர் சிவகுமார். இவர் சென்னிலை கிராம நிர்வாக அலுவ லராகவும் செயல்பட்டு வந்தார். இவர் அரசு நிலத்திற்கு போலி யாக பட்டா தயாரித்து வழங்கி வந்ததாகப் புகார் எழுந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் ஈரோடு வருவாய் கோட்டாட்சி யர் சதீஷ்குமார் விசாரணை நடத்தினார். விசாரணையில் போலி கையெழுத்துகள், போலி பட்டாக்கள் தயாரித்தது உறு தியானது. இதனையடுத்து விஏஓ சிவகுமார் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.
ஆபாச படம் எடுத்து மிரட்டி பலாத்காரம் இளைஞர் மீது கல்லூரி மாணவி புகார்
கோவை, ஜூலை 24– ஆபாச படம் எடுத்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட தாக இளைஞர் ஒருவர் மீது கல்லூரி மாணவி புகார் தெரி வித்துள்ளார். ஈரோட்டை சேர்ந்தவர் 24 வயது கல்லூரி மாணவி. இவர் கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில், கூறியிருப்பதாவது, நான் மும்பையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. படித்து வருகி றேன். கடந்த 2020 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த மாரத் தான் ஓட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றேன். அப் போது அதில் பங்கேற்ற கோவை சரவணம்பட்டியை சேர்ந்த ராஜ்குமார் (31), என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் நட்பாக பழகி வந்தோம். அவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இதனை மறைத்து அவர் என்னை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்தார். ஆனால், நான் மறுத்து விட்டேன். இதனால் ஆத்திரமடைந்த அவர் எனக்கு தெரியாமல் எடுத்து வைத்திருந்த என்னுடைய ஆபாச படத்தை எனக்கு அனுப்பி மிரட்டி, என்னுடைய விருப்பம் இல்லாமல் பல வந்தப்படுத்தி பாலியல் பலத்காரத்தில் ஈடுபட்டார். மேலும், தொடர்ந்து என்னை பாலியல் பலாத்காரம் செய்து வந்தார். ராஜ்குமாரின் வீடு கோவையில் இருப்பதை அறிந்து அவரி டம் உள்ள என்னுடைய படங்களை பெற்றுக்கொள்வதற்கு கோவைக்கு வந்தேன். அவர் என்னை கொடிசியா அருகே வர சென்னார். அங்கு சென்று நான் புகைப்படத்தை கேட்டதற்கு, அவர் தர மறுத்து தகாத வார்த்தைகளால் பேசி தாக்கி னார். எனவே, என்னை மிரட்டி பாலியல் பலத்காரத்தில் ஈடுபட்ட ராஜ்குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். அப்புகாரின் பேரில் கிழக்கு அனைத்து மகளிர் போலீசார் கல்லூரி மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் பலத்காரத்தில் ஈடுபட்ட ராஜ்குமார் மீது பாலி யல் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
ரூ.42.65 கோடியில் நலத்திட்ட உதவிகள்
தருமபுரி, ஜூலை 24- தருமபுரி மாவட்டத்தில் 40 ஆயிரத்து 964 நலவாரிய உறுப் பினர்களுக்கு ரூ.42.65 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங் கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தகவல் தெரி வித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட் டுத்துறையின் கீழ், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர்கள் சமூக பாது காப்பு மற்றும் இதர 17 நலவாரியங்கள் செயல்பட்டு வருகின் றது. தருமபுரி மாவட்டத்தில் கட்டுமான தொழிலாளர் நலவாரி யத்தில் இதுவரை 2 லட்சத்து 52 ஆயிரத்து 416 தொழிலா ளர்களும், அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தில் 23 ஆயிரத்து 15 தொழிலாளர்களும், ஓட்டுநர்கள் நல வாரியத்தில் 5 ஆயிரத்து 27 ஓட்டுநர்களும் பதிவு செய்து உறுப்பினர்களாக உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 37 ஆயிரத்து 608 நலவா ரிய உறுப்பினர்களுக்கு ரூ.38.58 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளும், 2 ஆயிரத்து 775 அமைப்புசாரா நலவாரிய உறுப்பினர்களுக்கு ரூ.2.88 கோடி மதிப்பிலான நலத்திட்ட உத விகளும், 528 ஆட்டோ ஓட்டுநர்கள் நலவாரிய உறுப்பினர்க ளுக்கு ரூ.44.20 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி களும் என மொத்தம் 3 நலவாரியங்களில் 40 ஆயிரத்து 911 நலவாரிய உறுப்பினர்களுக்கு ரூ.42.65 கோடி மதிப்பி லான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தெரிவித்துள்ளார்.
கோவை: காவலர் குடும்பத்திற்கான போட்டிகள்
கோவை, ஜூலை 24– கோவை மாநகர ஆயுதப் படை காவத்து மைதானத் தில் காவலர்கள் குடும்பத்தி னர் மற்றும் குழந்தைகளுக் கான விளையாட்டு போட்டி கள் நடைபெற்றது. இந்த போட்டிகளை கோவை மாந கர காவல் ஆணையர் பால கிருஷ்ணன் தொடங்கி வைத் தார். இதில், இசை நாற்காலி, சாக்கு ஒட்டப்பந்தயம் மற் றும் தண்ணீர் நிரப்புதல் போன்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.
அரசு பணியாளர்களுக்கு மின் ஆளுமை செயல்பாடு பயிற்சி
திருப்பூர், ஜூன் 24- தமிழக அரசு துறைகளின் மின் ஆளுமை செயல்பாடு மூலம் அலுவலகம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அலுவலகப் பணிகளில் காகிதப் பயன்பாடு குறைத்தல், நேர விரயம் தவிர்த்தல், அவசர மற்றும் முக்கிய தகவல்கள் உட னுக்குடன் பரிமாறுதல், கோப்புகள் பராமரிப்பில் எளிய நடை முறை ஆகியன இதன் நோக்கங்களாகும். இதன்ஒருபகுதியாக மின் ஆளுமை செயல்பாடு பயிற்சி வகுப்புகள் திருப்பூர் மாவட்டத்தில் உரிய துறை ஊழியர் களுக்கு அளிக்கப்படுகிறது. அவ்வகையில் அரசு துறைகளில் உள்ள வருவாய்த்துறை, கனிமவளத்துறை, ஊரக வளர்ச்சி துறை மற்றும் பேரூராட்சிகள் துறை ஊழியர்களுக்கு இதற் கான பயிற்சி முதல் கட்டமாக வழங்க முடிவு செய்யப்பட்டது. இதில் வருவாய் துறை மற்றும் கனிம வளத்துறைக்கு பயிற்சி நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 3 ஆர்.டி.ஓ., அலுவலகங் கள் மற்றும் 9 தாலுகா அலுவலகங்களில் பணியாற்றும் ஊழி யர்களுக்கு இ-ஆபீஸ் நடைமுறை குறித்து பயிற்சி, மாநக ராட்சி வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் நடந்தது. இ-சிஸ்டம்ஸ் அலுவலர்கள் முத்துக் குமார், சம்பத்குமார் ஆகியோர் பயிற்சி அளித்தனர். அடுத்த கட்டமாக ஊரக வளர்ச்சி மற்றும் பேரூராட்சி துறை ஊழி யர்களுக்கு இப்பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
மூலனூர் - ரூ.2.57 கோடிக்கு பருத்தி ஏலம்
தாராபுரம், ஜூலை 24- மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.2.57 கோடிக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம், மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூட முதுநிலை செயலாளர் ஆர்.பாலச்சந்திரன் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, மூலனூர் ஒழுங் குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி விற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக் கல், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சேர்ந்த வணி கர்கள் மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர். அதிகபட்ச விலை யாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ.10 ஆயிரத்து 533-ம், கு றைந்தபட்ச விலையாக ரூ.7 ஆயிரத்து 550-ம், குறைந்த பட்ச விலையாக ரூ.7 ஆயிரத்து 550-ம், சாராசரி விலையாக ரூ.9 ஆயிரத்து 350க்கும் விலை போனது. மொத்தம் 8865 மூட்டை கள், அதாவது 2 ஆயிரத்து 875 குவிண்டால் பருத்தி விற்பனைக் காக வந்திருந்தது. இது ரூ.2 கோடியே 57 லட்சத்து 40 ஆயிரத்து 453 க்கு விற்பனையானது. இந்த ஏலத்தில் 24 வணிகர்கள் பங்கேற்றனர். ஏலத்திற்கான ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் சிவக்குமார் முன்னின்று மேற்கொண் டார்.
செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
திருப்பூர், ஜூலை 24- செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்ப டுத்தும் வகையில் திருப்பூரில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. சென்னை மாமல்லபுரத்தில் வருகின்ற 28 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை 44 ஆவது சர்வதேச ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது . செஸ் போட்டி குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநில அரசால் பல்வேறு நடவ டிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதி யாக திருப்பூர் மாவட்டம் நிர்வாகம், திருப்பூர் ரைடர்ஸ் கிளப் மற்றும் இந்தியன் யங் அமைப்பு சார்பில் திருப்பூரில் விழிப்பு ணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. ஞாயிறன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங் கிய இந்த சைக்கிள் பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் 200க்கும் மேற்பட்ட சைக்கிள் ரைடர்கள் கலந்து கொண்டு 30 கிலோமீட்டர் வரை சைக்கிளில் பேரணியாகச் சென்று பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
காங்கயத்தில் அடுத்த மாதம் நடைபெறும் உணவுத்திருவிழா
திருப்பூர், ஜூன் 24- திருப்பூர் மாவட்ட அளவிலான பொது வினியோக திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் நடந்தது. வருவாய் கோட்டாச்சியர் ஜெய்பீம் வரவேற் றார். அமைச்சர்கள் சக்ரபாணி, சாமிநாதன், கயல்விழி, பொது வினியோக திட்டப்பணிகளை ஆய்வு செய்தனர் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு முதன்மை செய லர் ராதாகிருஷ்ணன் பேசிதாவது, நுகர்வோர் நலன் கருதி, ரேஷனின் தரமான அரிசி வழங்குவதை உறுதி செய்ய வேண் டும். மாவட்டத்தில், ஆற்று வெள்ளம், மழை வெள்ளத்தால், ரேஷன் கடை பொருட்கள் பெற முடியாத பகுதிகள் இருந் தால், கிராமத்துக்கே சென்று பொருட்கள் வழங்க வேண்டும். மலைகிராமத மக்களுக்கு, ரேணன் பொருட்களை தேடிச் சென்று வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண் டும் தமிழகத்தை சேர்ந்த 94 ஆயிரம் பேர், வெளிமாநிலங்க ளில் இருந்தபடி, ரேஷன் பொருள் பெற்று வருகின்றனர். தகுதி யற்ற நபர்களுக்கு, சிறப்பு சலுகை கார்டுகள் வழங்க கூடாது. தகுதியான நபர்களுக்கு சலுகை கிடைக்காமலும் இருக்கக் கூடாது. இவ்வாறு அவர் பேசினார். உணவு பாதுகாப்புத்துறை சார்பில், ஆகஸ்டு 7 ஆம் தேதி, காங்கயத்தில் உணவுத்திருவிழா நடக்க உள்ளது. திருவிழா வுக்கான போஸ்டர்களை அமைச்சர்கள் வெளியிட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை பெற்றுக்கொண்டார்.
திருப்பூர் மாவட்டத்தில் 48 ஆயிரம் பேர் குரூப் 4 தேர்வு எழுதினர்
திருப்பூர், ஜூலை 24- திருப்பூர் மாவட்டத்தில் ஞாயிறன்று நடை பெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை 147 மையங்களில் 48 ஆயிரத்து 145 பேர் எழுதினர். தமிழகம் முழுவதும் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் உள்ளிட்ட பணிக ளுக்கு குரூப் 4 தேர்வு ஞாயிறன்று நடை பெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் இந்த தேர்வுக்கு ஏராளமானவர்கள் படித்து வந்தனர். இந் நிலையில் திருப்பூர் மாநகரில் 4,697 பேர், அவி னாசியில் 4,642 பேர், தாராபுரத்தில் 6,157 பேர், காங்கேயத்தில் 4,761 பேர், மடத்துக்கு ளத்தில் 1,875 பேர், ஊத்துக்குளியில் 1,628 பேர், பல்லடத்தில் 3,766 பேர், திருப்பூர் வடக்கு பகுதியில் 6,584 பேர், திருப்பூர் தெற்கு பகுதியில் 6,981 பேர், உடுமலையில் 7,054 பேர் என மொத்தம் மாவட்டம் முழுவதும் இந்த தேர்வை 48 ஆயிரத்து 145 பேர் எழுத பதிவு செய்திருந்தனர். 147 மையங்களில் மாவட்டம் முழுவதும் இந்த தேர்வு நடைபெற்றது. 166 தலைமை கண்காணிப்பாளர்கள் தேர்வை கண்கா ணிக்க நியமிக்கப்பட்டு இருந்தனர். இது போல் 43 மொபைல் கண்காணிப்பாளர்கள், 16 பறக்கும் படையினர், 174 வீடியோ கிராபர் கள், சூப்பர்வைசர்கள் 166 பேர் தேர்வை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த குரூப் 4 தேர்வை முன்னிட்டு மாவட் டம் முழுவதும் உள்ள தேர்வு மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் செய்யப்பட்டு இருந்தன. இதற்கு இடையே காலை தேர்வு மையங்களுக்கு வந்த மாணவ மாணவிகள், தங்களது தேர்வு அறை குறித்த விவரங்களை பார்த்தனர். தொடர்ந்து அவர்களின் ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டு தேர்வு அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தேர்வை முன்னிட்டு தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டிருந்தது.
நாய் கடித்து 12 பேர் மருத்துவமனையில் அனுமதி தெருநாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த கோரிக்கை
கோவை, ஜூலை 24- கோவை உக்கடம் பகுதியில் நாய் கடித்து 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபர்வளை கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், காவல் ஆணையாளர் பால கிருஷ்ணன் நேரில் சந்தித்து நலம் விசா ரித்தனர். கோவை உக்கடம், கரும்புக்கடை பகுதி களில் வெறி நாய் கடித்து பத்திற்கு மேற்பட்ட வர்கள் பாதிக்கப்பட்டு தற்பொழுது அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனு மதிக்கப் பட்டுள்ளார்கள். கோவை கரும்புக் கடை, ஜிஎம் நகர், புல்லுக்காடு, போன்ற பகு திகளில் மாநகராட்சியின் சார்பாக தூய்மை பணிகள் மேற்கொள்ளாததால் ஆங்காங்கே குப்பைகள் நிறைந்து காணப்பட்டதுடன், நாய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து மக் களை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தப் பகுதி மக்கள் பலமுறை கோவை மாநகராட்சி ஆணையாளரிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் தெருநாய்களை கட்டுப் படுத்தி இப்பகுதியில் வாழும் மக்களின் பாது காப்பை உறுதிப்படுத்த புகார் மனுக்களாக வும், கோரிக்கை மனுக்களாகவும் கொடுத்தி ருந்தனர். மாநகராட்சியை முற்றுகையிட்டு போராட்டத்தையும் நடத்தினார்கள். பொதுமக்களின் புகார் குறித்து கண்டு கொள்ளாத கோவை மாநகராட்சி நிர்வாகத் தின் அலட்சியத்தால் தற்போது இந்த பகுதி யைச் சேர்ந்த பத்திற்கும் மேற்பட்டவர்களை வெறி நாய் ஒன்று கடித்துள்ளது. இதில் சிகிச் சைக்காக பத்து பேர் ஒரே நேரத்தில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட னர். இத்தகவல் அறிந்ததும் உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்த கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன், கோவை மாநகர காவல் ஆணையா ளர் வி.பாலகிருஷ்ணன் நாய் கடித்ததில் சிகிச்சை பெற்றுவருபர்வகளை நேரில் சந் தித்து நலம் விசாரித்தனர். முன்னதாக கோவை மாநகராட்சிக்குட் பட்ட பகுதிகளில் தெருநாய்களின் பெருக்கம் அதிகரித்துள்ளது. இதனை உடனடியாக கட் டுப்படுத்த வேண்டும். மேலும், தெருநாய் களை பிடித்து செல்ல வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துள்ளது.