districts

img

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரூ.3.05 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்

நாமக்கல், ஜூன் 13- மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள்  கூட்டத்தில் 35 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3.05 லட்சம் மதிப் பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கி னார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாற் றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் புதனன்று மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் தலைமையில ்நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு தேவையான உதவி உபகரணங்கள், மூன்று சக்கர சைக்கிள், மடக்கு சக்கர நாற்காலி, பேட்டரி பொருத்தப் பட்டுள்ள அதிநவீன சிறப்பு சக்கர நாற்காலி, மோட்டார்  பொருத்திய தையல் இயந்திரம், காதொலி கருவி, செவித் திறன் குறைபாடுடையோர் மற்றும் கண் பார்வையற்றோ ருக்கு செல்போன் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 114  மனுக்களை ஆட்சியரிடம் அளித்தனர். இந்த மனுக்களை பெற் றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் சம்மந்தப்பட்ட அலுவலர்களி டம் மனுக்கள் மீது பரிசிலீனை செய்து 10 நாட்களுக்குள் தீர்வு  காண வேண்டும். முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார். பின்னர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில்,  2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1 லட்சம் மதிப்பிலான பேட்டரி பொருத்தப்பட்டுள்ள அதிநவீன சிறப்பு சக்கர நாற் காலி, 27 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.3 ஆயிரம் மதிப்பி லான காதொலி கருவிகள் என மொத்தம் 34 மாற்றுத்திறனாளி களுக்கு ரூ.3.05 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி களை வழங்கினார்.  இதில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகதட்சணாமூர்த்தி, சமூக பாதுகாப்புத்திட்ட தனித் துணை ஆட்சியர் ஜெ.தேவிகாராணி உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.