கோவை, பிப்.10- ஆழியார் மற்றும் கோட்டூர் பகுதி யில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி ஆய்வு மேற்கொண்டார். கோவை, ஆனைமலை வட்டம், ஆழியாரில் இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாம்கள் உள்ளன. இங்குள்ள வீடுகள் பழுதடைந்த நிலையில் காணப் பட்டது. இதையடுத்து மேற்கொள்ளப் பட்டு வரும் பணிகளை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார். இந்த ஆய்வின்போது கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அலர் மேல்மங்கை, பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். இதனைத்தொடர்ந்து ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கூறுகையில், தமிழ் நாட்டில் வசிக்கும் இலங்கைத் தமிழர் களின் குடும்பங்களுக்கு வீடுகள் கட்டித் தருவது உள்பட பல்வேறு திட்டங்களை முதல்வர் அறிவித்துள்ளார். ‘இலங்கை அகதிகள் முகாம்’ என்பதை ‘இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்’ என முதல்வர் பெயரை மாற்றினார். மேலும், இவர்களுக்கென அரசு தனியே ஒரு குழுவை உருவாக்கி செயல்படுகிறது.
இதன்தொடர்ச்சியாக, சட்டமன்ற பேரவை விதி எண் 110-கீழ் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் பழுதடைந்த நிலையில் உள்ள வீடு களை இடித்துவிட்டு புதிதாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக நடப்பு நிதி ஆண்டில் 300 சதுர அடி கொண்ட 4 வீடுகள் கொண்ட தொகுப்பு வீடாக கட்டுவதற்கு வீடு ஒன்றிக்கு ரூ.5 லட்சம் மற்றும் தனி வீடுகள் கட்டு வதற்கு வீடு ஒன்றிக்கு ரூ.5.65 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத் திட்டம் ஊரக வளர்ச்சி - ஊராட்சித் துறை மற்றும் தமிழ்நாடு நகர்புற வாழ் விட மேம்பாட்டு வாரியம் மூலமாக செயல்படுத்தப்படுகின்றது. கோவை மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் வேடர் காலனி, பேரூர் பூலுவபட்டி, கோட்டூர் ஆழி யார் ஆகிய 4 இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாமில் 1059 குடும்பங்களை சேர்ந்த 3,002 மக்கள் வசித்து வரு கின்றனர். ஆனைமலை வட்டாரத்திற்குட்பட்ட கோட்டூர் பேரூராட்சியில் அமைந் துள்ள ஆழியார் இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாமில் 4 வீடுகள் கொண்ட தொகுப்பு வீடுகள் தலா ரூ.5 லட்சம் வீதம் 317 வீடுகள் மற்றும் கோட்டூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 4 வீடுகள் கொண்ட தொகுப்பு வீடுகள் தலா ரூ.5 லட்சம் வீதம் 112 வீடுகள் என மொத்தம் 429 வீடுகள் ரூ.21.40 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரு கின்றது. மேலும், ஆழியார் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.5.65 லட்சம் மதிப்பீட்டில் ஒரு தனி வீடும் கட்டப்பட்டு வருகின்றது, என்றார்.